Sunday 13 April 2014

ஊர்வலம்


திருவாரூர் தேர் 
நகர்ந்தால் 
அது 
நகர்வலம் 

பெண்ணே 
நீ 
அங்கு 
நடந்தால் 

அந்த தேரும் 
உன் பின் 
வரும் 
ஊர்வலம் . 

...கவியாழினிசரண்யா ...

Saturday 5 April 2014

தா(பே)ய்மையோடு ஒரு குரல்


மும்மாரி பொழிய வைத்து 
கம்மாவும் நிரம்ப வைத்து 
முத்தாக தானியம் 
விளைய வைத்து 
சுத்தமாக சுவாசிக்க வைத்தேன் 
என் ம(மா)க்களே 

சத்தான உணவோடு 
புத்தியும் தூண்டிவிட்டு 
அறிவியலும் கற்க 
அறிவு வளர்த்தேன் 
ஆக்கங்கள் பெருகிடவே 
களிப்பும் கண்டேன் 
அழிவுகளை அதிகமாக்கி 
ஆடம்பரத்தில் அமிழ்ந்தீர்களே 
என் அன்(வம்)பிற்க்குறியவர்களே 

வண்ண உணவுகளும் 
வாகன பெருக்கமும் 
குளிர்பதன சாதனமும் 
நிமிடத்தில் நிமிரும் உற்பத்தியும் 
அபார வளர்ச்சியென்று 
அடுக்கடுக்காய் மரங்களை 
வெட்டி வாழும் 
என் பி(தொ)ள்(ல்)ளை(லை)களே 

மாடிமேல் மாடியென 
பாரத்தை என் தலையில் வைத்து 
விரைவாக சென்றுவர சுரங்கம் வைத்து 
கழிவுகளை நிரப்பிடவே 
பாதாளத்தில் கொட்டி 
வாழும் மரங்களை வெட்டி 
வலுவான என்னை 
வலுவிழக்க வைத்தீர் 
என் செல்வ(ஜென்ம )ங்களே 

வலி பொருத்து வாழ வைத்தேன் 
வலி தாங்க முடியாமல் போகவே 
பேரழிவுதர ஆட்ப்படுத்தப்பட்டேன் 
இனி என் நிலை என் கையிலில்லை 
வசதிதேடி வாழுமுன்னே - இயற்கை 
வளம் காத்து வாழ்வை வாழப்பாருங்களேன் 
என் மதி(கெ )கொண்(ட்)ட மானிட(ரே)னே. 
  ...கவியாழினிசரண்யா...