Sunday 20 July 2014

நட்பெனும் நண்பனுக்கு


என்கதை பல உன்னிடம்  சொல்லிட வார்த்தை தேடுகையில் 
அத்துனை வார்த்தைகளும் இல்லாது மறைந்து 
உன் அன்பெனும் மனம், புரிந்துகொள்ளும்படி -நான்  
மௌனத்தை மட்டும் உதிர்க்கிறேன் எப்போதும் 

முகத்தில் போலிஇல்லா புன் சிரிப்போடு ,
மனதில் கள்ளமில்லா உண்மை அன்போடு ,
எண்ணத்தில் களங்கமில்லா நல் நட்போடு - தொடரும்
உன் நட்பில் நடைபோடுகிறேன் நாட்களோடு

மாயகண்ணனின் புல்லாங்குழல்  இசை 
மனதில் காதல் சொட்டவைக்கும்  ராதைக்கு
மனம் நிறைந்த நண்பன் உன் வார்த்தைகள் -தன்னபிக்கை 
மரம் வளர்க்கும் நட்போடு  இந்த தோழிக்கு 

மகிழ்ச்சியோடு மனம் நினைப்பதெல்லாம்   
காட்சியாக  தருமாம் கதைகளில் சொர்க்கம் 
என் மனம் காண்கிறது மகிழ்ச்சி நிறைந்து - என்றும்
உன் நட்பால் நிஜ வாழ்வில் சொர்க்கம்.

                           ...கவியாழினி சரண்யா ...

No comments:

Post a Comment