Friday 3 January 2014

பால்வழியில் பாவையிவள்


பால்வழியில் பாவையிவள்  
வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் 
வட்டமிட்டு பறந்துவர 
நட்போடு என்னை அழைத்துச்சென்று
இறக்கிவிட்டன 

வெண்பஞ்சு வானமென்னும் 
மெத்தையிலே நானும் விழ 

புகை மண்டல தேவதைகள் 
கைப்பிடித்து அழைத்துச்செல்ல 

வானவில்லால் கட்டிய நிலவு 
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன 

நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து 
ஒன்றுகூடி ஒளி வீச 

சூரியனும் தூர நின்று கடும் 
குளிரை மறையச் செய்ய 

பூமி வந்து அருகமர்ந்து 
பசுமைஎன்னும் விசிறி வீச 

கோள்களெல்லாம் என்னை 
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட 

பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது 
இவளுக்கு உணவு பரிமாற்றம் 

வானின் விண்கற்கள் இவள் நடைபயில 
இடம் விட்டு நகர்ந்து செல்ல 

குளிர்காற்று செல்லமாக மெல்ல வந்து 
அந்த பல்லாக்கு ஊஞ்சலில் ஆட்டிவிட 

மேகம் சூழ்ந்த தென்றலது தாலாட்டுபாடிட 
கண்ணுரங்கினேன் நான் கண்ணுரங்கினேன் 

விழித்துப்பார்த்தேன், வாழ்ந்துகொண்டிருந்தது 
வானுலகமல்ல கனவுலகமென்று உணர்ந்தேன் 

பால்வழியில் பாவையிவள் மனம்மகிழ்ந்தேன் 
இந்த மண்ணுலகிற்கு விண்ணுலகை ஓர்நாள் 
விருந்துக்கு அழைத்துவர ஆசைகொண்டேன். 

...கவியாழினி...

4 comments:

  1. நல்ல கனவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த மகிழ்ச்சிகள் தோழி :-)

      Delete
  2. நல்ல அழகான வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவிலும் வாழ்த்திலும் மிகுந்த மகிழ்ச்சிகள் :-)

      Delete