Sunday 17 April 2016
Sunday 14 September 2014
இந்த மனம்
அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது
ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும்
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம்
போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை இந்த மனம்
சருகுகளின் பாதியிலே வாழ்கை
பயணித்தாலும் பசுமை புற்களின்
பச்சை வாசம் மறக்கவில்லை இந்த மனம்
அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
சிரிக்கும் நேரம் வருகையில் சிரிப்பை
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம்
வலியோடு வாழ்க்கை வரமறுத்து
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும்
அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை
தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம்
மணி நேரமெல்லாம் மரண வழியாக
தோன்றினாலும் ஒரு நிமிடம் மலரின்
முக மலர்சியாய் சிரித்து மகிழும் இந்த மனம்
தன்னம்பிக்கையோடு தைரியமாய்
விடாமுயற்சியோடு தன் பாதை நோக்கி
பயணத்தை தொடரும் இந்த மனம்
சில நேரம் என்னையே பெருமை பட வைக்கிறது.
....கவியாழினிசரண்யா...
Sunday 24 August 2014
நெருப்புக் கூண்டு
பறந்து விரிந்த உலகுதன்னில் - சிறகடித்த
பறவையிவள் எண்ணங்களை எடுத்து
எரிதீயில் போட்டு பொசுக்குகின்றனர்- சமுதாய
எதிர்ப்பார்ப்பென்று என்னை ஏமாற்றி
அறிவு சுரங்கத்தில் அருளிய - பொருளென்று
அறத்தோடு வளர்த்து அழகுநடைபோட
புகழ் முன்னேற்றம் பெண்ணிற்கு - வேண்டாமென
புழுகலேற்றம் மனதில் நிரப்புகிறார்கள்
பருவ வயதினிலே முடித்திடனும் -திருமணம்
பக்குவமாயென்று பனிக்கட்டியாய் உருக்கி
மயக்குகின்றனர்; பள்ளி வயதிலே -பதியம்போட்டு
மனதில் பசுமரத்தாணியான என்லட்சியத்தை
உண்மைகளை எடுத்துக் சொன்னால் - ஊரார்க்கு
உணராத வாயாடியென்று பெயர்
தற்காப்புக் கலை கற்று - நடைபோட்டால்
தகாத அடங்காப்பிடாரி இவள்
சுதந்திரமென சுற்றித்திரிந்து சுடும் -பாதைச்செல்ல
சுரத்தை இல்லாத பெண்ணல்ல
அடைப்பட்ட கூண்டில் சுதந்திரமுடன் - வாழ
அடிமை பெண்ணும் நானல்ல
சுதந்திர நாட்டினில் சுதந்திரமுடன் - என்
கூண்டின் சுற்றுத்தளம் என்சுதந்திரம்
நெகுகிறது என்மனம் ; திறமைகள் பொசுங்க
நெருப்பிலிட்ட என்மனம் வேகுகிறது
(சமூகமென்னும் நெருப்புக் கூண்டுக்குள் அடைப்பட்டு நானிங்கு ,என முன்னேற துடிக்கும் ஒரு பெண்ணின் குமுறல்கள் )
எரிதீயில் போட்டு பொசுக்குகின்றனர்- சமுதாய
எதிர்ப்பார்ப்பென்று என்னை ஏமாற்றி
அறிவு சுரங்கத்தில் அருளிய - பொருளென்று
அறத்தோடு வளர்த்து அழகுநடைபோட
புகழ் முன்னேற்றம் பெண்ணிற்கு - வேண்டாமென
புழுகலேற்றம் மனதில் நிரப்புகிறார்கள்
பருவ வயதினிலே முடித்திடனும் -திருமணம்
பக்குவமாயென்று பனிக்கட்டியாய் உருக்கி
மயக்குகின்றனர்; பள்ளி வயதிலே -பதியம்போட்டு
மனதில் பசுமரத்தாணியான என்லட்சியத்தை
உண்மைகளை எடுத்துக் சொன்னால் - ஊரார்க்கு
உணராத வாயாடியென்று பெயர்
தற்காப்புக் கலை கற்று - நடைபோட்டால்
தகாத அடங்காப்பிடாரி இவள்
சுதந்திரமென சுற்றித்திரிந்து சுடும் -பாதைச்செல்ல
சுரத்தை இல்லாத பெண்ணல்ல
அடைப்பட்ட கூண்டில் சுதந்திரமுடன் - வாழ
அடிமை பெண்ணும் நானல்ல
சுதந்திர நாட்டினில் சுதந்திரமுடன் - என்
கூண்டின் சுற்றுத்தளம் என்சுதந்திரம்
நெகுகிறது என்மனம் ; திறமைகள் பொசுங்க
நெருப்பிலிட்ட என்மனம் வேகுகிறது
(சமூகமென்னும் நெருப்புக் கூண்டுக்குள் அடைப்பட்டு நானிங்கு ,என முன்னேற துடிக்கும் ஒரு பெண்ணின் குமுறல்கள் )
...கவியாழினி...
Saturday 23 August 2014
கடிதங்கள்
கட்டுக்கடங்கா பாசத்தையும்
கணிக்க இயலா நேசத்தையும்
சொல்லி முடிக்க முடியாமல்
சொல்லாமலே அறியவைக்கும்
எண்ணிலடங்கா எண்ணங்களின்
வெளிப்பாடாய் எத்தனையோ
உறவுகளின் குவியலாய்
தொன்று தொட்டு தொடர்ந்து வந்த
தொய்வில்லா நன்றிமறவா பண்பாடது
ஓர் ஊரனைத்தும் விசாரித்து முடியாமல்
ஓர் ஓரத்திலும் நுணுக்கி எழுதிவிசாரிக்கும்
வரும் நாளை எதிர்ப்பார்த்து
வந்து வந்து எட்டிப்பார்க்கும் சுகம்
வந்துசேர்வதை எண்ணி
வயது பெண் முதல்
வயதான மூதாட்டி வரை
காத்திருந்து கையில் பெரும் சுகம்
முன் தெரு மல்லிகா அக்கா முதல்
முள்ளுக்காட்டு முனுசாமி அண்ணன்
வரை நலம் விசாரித்து
பண்பாய் வீட்டு பசு கன்றையும்
பக்கத்து வீட்டு கந்தசாமி
தாத்தாவின் கைத்தடி வரை
தன் கண்மூடாமல் கணக்கிட்டு விசாரித்து
தன் கையில் வைத்திருக்கும்
பேனாவின் மை தீரும் வரை
தீட்டி முடித்து பின்பும் அதை
விட்டுட்டனே என்று புலம்பி தீட்டும்
ஓரத்தில் நுணுக்கி விசாரிக்கும் அன்பு
காவல் தெய்வமாய் கண்ணுக்கு தெரியும்
காவி உடை அணிந்த தபால்காரர்
என் பையன் எழுதிருக்கான் படித்து சொல்லடி
என் தங்கம் என்று பேத்தியை கொஞ்சும் பாட்டி
கணவனின் விசாரிப்பை படித்து கண்ணீரில்
கண் நேரில் பார்த்த மகிழ்சியில்
காகிதத்தை கட்டியணைக்கும் மனைவி
இது அனைத்திலும் நிரம்பி வழியும்
ஒன்றேஒன்று இந்த கள்ளமில்லா
உள்ளங்களின் கணிக்க முடியா அன்பு
அந்த காலத்தில் எழுதிய
கடிதங்களை பிரதி எடுத்தால்
அவை இக்கால நீண்ட முழு தாளின்
நான்கு பக்கம் நிறையும்
அத்துணையும் அழகான அன்பின் ஏக்கங்கள்
ஆசையாய் எடுத்து படித்தேன் அந்தக்காலத்தில்
ஆறுதலாய் வந்து போன கடிதாசி
என்ற கடிதங்களை ஏக்கத்தோடு ...
...கவியாழினிசரண்யா..
Subscribe to:
Posts (Atom)