Thursday, 20 March 2014
Wednesday, 12 March 2014
எல்லையற்ற கடலின் ஓர் அலை
பத்துமாதமாய் வயிற்றில்
தங்கி பிறந்தவனெ(ளெ)ன்றா
மொத்தமாக கயிற்றில்
உயிரை விட வந்தாய் ---இல்லை
ஒரு துளி விந்தில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
ஒரு துளி விசத்தில் உயிரை
மரிக்க துணிந்தாய் ---இல்லை
இருவரின் சக்தியும் ஒன்றாகி
பிறந்தவனெ(ளெ)ன்றா
ஒருவனா(ளா)ய் கத்தியில்
உயிரை பிரிக்க வந்தாய்---இல்லை
உன் பெற்றோரின் உடல்
சூட்டில் பிறந்தவனெ(ளெ)ன்றா
நெருப்பின் சூட்டில்
பஸ்பமாக வந்தாய் ---இல்லை
பனிக்குட நீரில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
பலகுட நீரென கடலில்
மூழ்க வந்தாய் ---இல்லை
தலைகீழாய் இவுலகில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
தலைகீழாய் மலையில்
விழ வந்தாய் ---உணர்வாயோ
இரு உடல்களின் காமத்தால்
பிறக்கவில்லை நீ
இரு உள்ளங்களின் சங்கமத்தால்
மண்ணில் பிறந்தாய்
உள்ளுறுப்புக்களின் மாற்றத்தால்
பிறக்கவில்லை நீ
உணர்வுகளின் உச்சத்தில்
உலகில் பிறந்தாய்
வாழ்வின் வலி தாங்காமல்
வந்தாயே உயிர் விட
நினைப்பாயோ ஒருநிமிடம்
உன்னை உயிரோடு ஈன்றெடுக்க
உன் தாய் அனுபவித்த வலியை-அதை
தாண்டியா உன் வாழ்க்கை வலிக்கிறது ?
உற்றவள் உள்ளிருந்து துடிக்க
தன்னிலையறியாது தவித்த
உன் தந்தையின் தவிப்பின்
வலியை விடவா
உன் வாழ்கை வலிக்கிறது ?
சிறு உயிரான உனக்கு வலி
பொருத்து வாழ்வு தந்த
அந்த தாய்தந்தை வலிக்காக
வலி நிறைந்த உன் வாழ்வை
வாழ்ந்து காட்ட மாட்டாயோ
வாழ்வின் எல்லை உன்னைவிட்டு
உன் உயிர் பிரியும் வரை அல்ல
உன் உள்ளத்தை விட்டு
உன் தன்னபிக்கை பிரியும் வரை
பரந்த கடலாய் இவ்வுலகினிலே
ஓயாத அலைகலென
எல்லோர்க்கும் ஓர் வாழ்வுண்டு
அதில் உன் வாழ்வும்
எல்லையற்ற கடலின் ஓர் அலை ...
...கவியாழினிசரண்யா...
Thursday, 6 March 2014
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே
என் முன்னோர்களின்
எத்துனை தலைமுறைகள் தாண்டி
இன்று நானிருக்கிறேன்?
இந்த உலகம் ஐம்பூதங்களில்
குடிகொண்டு வாழ்வதை
ஆன்மீகம் என்கிறார்கள்
இந்த உலகின் ஐம்பூதங்களை
ஆராய்ந்து வாழ்வதை
அறிவியல் என்கிறார்கள்
தியானித்து உலகை மறந்து
சமாதி நிலை அடைவதுதான்
ஆன்மீகத்தின் உச்சமென்றால்
எப்படியும் மனிதன் ஒரு
தருணத்தில் சமாதி நிலைக்குத்
தானாகவே செல்கிறானே
நித்தம் கண்டுபிடிப்புகளும்
அழிவுகளும் ஆராய்ச்சிகளும்தான்
அறிவியலின் உச்சம்மென்றால்
ஒவ்வொரு கணத்திலும்
இவ்வுலகில் ஒன்று
அழிவுக்குள்ளாகியும்
புதிய கண்டுபிடிப்பாகவும்
உருவாகிறதே !
ஒரு துளி விந்தின்
வெளியேற்றந்தான்
ஆழ்ந்த அன்பின்
உச்சமென்றால்
அதுவும் சிலநேரங்களில்
திருப்தியடையாத ஒன்றாக
மாற்றம் பெருவதேன்?
இங்கே ,
இறப்பையும் பிறப்பையும் தாண்டி
சூரிய சந்திர உதயமறைவை தாண்டி
ஆன் பெண் அன்பை தாண்டி
ஆன்மிக அறிவியலை தாண்டி
உலகமென்னும்
நாடக மேடையில்
மனிதர்களென்னும்
கதாபாத்திரத்தில்
நித்தம் ஒரு நாடகம்
அரங்கேறிகொண்டே
இருக்கிறது
தனக்கு எதிரே ஒரு சபை
தம் நடிப்பை கண்கொட்ட
பார்த்து கொண்டிருப்பதை
உணர்ந்து நடிப்பவன்
உச்சம் பெருகிறவனாகவும் ,
தானே நடிகன்
தானே பார்வையாளனென
நடிப்பவனை எச்சமாக
நினைக்கவைத்தும்
இந்த உலகம் என்றும்
சாதா(சதா)ரணமாகவே
இயங்கிக்கொண்டிருக்கிறது.
காலங்கள் முடிந்த பின்பு
ஆடிய ஆட்டங்கள் மறைந்து
அமைதியாக செல்கிறான்
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே...
...கவியாழினி...
Subscribe to:
Posts (Atom)