Thursday 6 March 2014

காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே


என் முன்னோர்களின் 
எத்துனை தலைமுறைகள் தாண்டி 
இன்று நானிருக்கிறேன்? 

இந்த உலகம் ஐம்பூதங்களில் 
குடிகொண்டு வாழ்வதை 
ஆன்மீகம் என்கிறார்கள் 

இந்த உலகின் ஐம்பூதங்களை 
ஆராய்ந்து வாழ்வதை 
அறிவியல் என்கிறார்கள் 

தியானித்து உலகை மறந்து 
சமாதி நிலை அடைவதுதான் 
ஆன்மீகத்தின் உச்சமென்றால் 

எப்படியும் மனிதன் ஒரு 
தருணத்தில் சமாதி நிலைக்குத் 
தானாகவே செல்கிறானே 

நித்தம் கண்டுபிடிப்புகளும் 
அழிவுகளும் ஆராய்ச்சிகளும்தான் 
அறிவியலின் உச்சம்மென்றால் 

ஒவ்வொரு கணத்திலும் 
இவ்வுலகில் ஒன்று 
அழிவுக்குள்ளாகியும் 
புதிய கண்டுபிடிப்பாகவும் 
உருவாகிறதே ! 

ஒரு துளி விந்தின் 
வெளியேற்றந்தான் 
ஆழ்ந்த அன்பின் 
உச்சமென்றால் 

அதுவும் சிலநேரங்களில் 
திருப்தியடையாத ஒன்றாக 
மாற்றம் பெருவதேன்? 

இங்கே , 
இறப்பையும் பிறப்பையும் தாண்டி 
சூரிய சந்திர உதயமறைவை தாண்டி 
ஆன் பெண் அன்பை தாண்டி 
ஆன்மிக அறிவியலை தாண்டி 

உலகமென்னும் 
நாடக மேடையில் 
மனிதர்களென்னும் 
கதாபாத்திரத்தில் 
நித்தம் ஒரு நாடகம் 
அரங்கேறிகொண்டே 
இருக்கிறது 

தனக்கு எதிரே ஒரு சபை 
தம் நடிப்பை கண்கொட்ட 
பார்த்து கொண்டிருப்பதை 
உணர்ந்து நடிப்பவன் 
உச்சம் பெருகிறவனாகவும் , 

தானே நடிகன் 
தானே பார்வையாளனென 
நடிப்பவனை எச்சமாக 
நினைக்கவைத்தும் 
இந்த உலகம் என்றும் 
சாதா(சதா)ரணமாகவே 
இயங்கிக்கொண்டிருக்கிறது. 

காலங்கள் முடிந்த பின்பு 
ஆடிய ஆட்டங்கள் மறைந்து 
அமைதியாக செல்கிறான் 
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே... 

...கவியாழினி...

No comments:

Post a Comment