Thursday 28 November 2013

நட்`பூ`


உன்னோடு  
நான் கொண்ட
 நட்பில் 
நட்பு என்ற 
வார்த்தையும் 
நட்`பூ` 
என்று மலர்ந்து 
மனம் பரப்பியது  
...கவியாழினி ...

Tuesday 26 November 2013

ஓ இரவே


ஓ இரவே 

என்னுடைய உறவுகளுக்காகவும், உணர்விற்காகவும் பலநாட்கள் என் விழிகள் இமையும் இமையும் கட்டித்தழுவும் சொர்க்கமாம் உறக்கத்தினை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றன ,

பகலில் இருளை தேடி மனிதன் உறங்குவதும் ,இரவில் வெளிச்சம் தேடி விழித்திருப்பதும் ஒரு தனி சுகம்தான் .ஆராய்ந்துப்பார்த்தால் அழகான உண்மை தெரியும் என்பார்கள் அதுபோல முதலில் சூழ்ந்து தெரிந்த இருள் சிறிது நேரம் சிந்தை குடிகொண்டு இருளில் மூழ்க அழகாய் அத்துனையும் ரம்மியமாய் தெரிகிறது பகலும் இரவும் அல்லாமல் தனிப்பட்ட அழகிய உலகம் கண்ணில் பட்டது .அதில் நான் வார்த்தையால் வர்ணிக்க முடியா ஓர் அமைதியான உணர்வை உணர்ந்தேன் .

பகலில் அத்துனை இரைச்சல்களுக்கு மத்தியில் இனிய ஓசையையும் இருகியதாய் நினைக்க வைக்கிறது , ஆனால் இரவு அந்த அழகிய இருளில் ஓர் ஒளி சூழ தெரியும் இரவில் விட்டில் பூச்சிகளும் சின்னஞ்சிறு வண்டுகளும் இடும்
ரீங்காரங்களும் ,பூச்சிகள் இடும் ஓலங்களும் எவ்வளவு இனிமையாய் இதம் தந்து எளிமையாய் செவி வழியாய் இதயம் குடிகொள்கிறது .

இரவில் தெரியும் இருளில் விழித்திருக்கையில் மனம் எங்கோ பறக்கிறது எல்லா சிந்தனைகளும் ஒன்றாகி அமைதி பரப்புகிறது ,பலவண்ணங்கள் ஒன்றாகி கருப்பு உலகுக்குள் கொண்டு சென்று வெண்மை ஒளியை கண்ணில் காட்டுகிறது .

இரவு ஓர் இரண்டாம் உலகம் , அது ஓர் அமைதி பெட்டகம் ,இதமான இனிய பொழுது ,வார்த்தைகளின் வர்ணிப்புக்கும் எட்டாத வானம் ,

பகல் முழுதும் ஓடி உழைத்த மனிதனுக்கு காலை விடியலுக்கு புத்துனர்ச்சி கொடுக்க இப்போது அவனுக்கு தாலாட்டுபாடி சோம்பல் போக்கும் தாய்..இரவின் தாயுள்ளம் எவ்வளவு பெரியது இத்துணை மக்களுக்கும் இருள்தாய் அவளின் தாய்மடி கொடுத்து தூங்க வைக்கிறாளே.

ஓ இரவே
எத்துனை உழைப்பாளிகளை உறங்க வைத்து அயர்வு போக்குகிறாய் காலை எழுந்து உழைக்க சுறுசுறுப்பு கொடுக்கிறாய்.

ஓ இரவே
எத்துனை மழலைகளை அழவைத்து தாயின் தூக்கம்களைத்து தாயின்அன்பை சோதிக்கிறாய்,

ஓ இரவே
எத்துனை கணவன் மணைவிகளை சுகம் காண வைத்து சுகத்துக்குள் மூழ்கடிக்கிறாய்,

ஓ இரவே
எத்துனை காதலர்களை தவிக்க வைக்கிறாய்,

ஓ இரவே
எத்துனை பணிகளை இந்நேரத்திலும் செய்து முடிக்க வைக்கிறாய்.

விசித்திர விஞ்ஞான உலகில் தவழும் அமைதி சித்திரமாய் விளங்கும் இரவே
என்னையும் இந்நேரம் இப்படி சிந்திக்க தூண்டி இப்படி எழுத வைக்கிறாய்
அழகின் வனப்பே , 
அமைதியின் ஊற்றே, 
புது உலகின் புது யுகமே, 
ஓ இரவே. 


(என் முதல் கட்டுரை கவிதையாக எழுத நினைத்தேன் என் எண்ணங்கள் ஒன்றாகி கட்டுரையாய் முடித்தன கவிதையாய் மாற்றம் தர விரும்பினேன் என் மனம் சொன்னது `பிறந்த குழந்தைக்கு (கவிதையாய் ) அலங்காரம் செய்து அழகை ரசித்தாலும்,நிர்வாணம் அதை விட அழகு பிறந்த குழந்தையிடம் மட்டும் `.என்றது எனவே இங்கு என் எண்ணத்தை அப்படியே வடித்துவிட்டேன் பிழை இருப்பின் பொறுத்தருள்க தோழமை நெஞ்சங்களே . )
...கவியாழினி ...

Friday 22 November 2013

வன்முறை


மரங்களில் மலர்கின்றன 
துப்பாக்கி குண்டுகள் 
```வன்முறை```
...கவியாழினி... 

கருப்பு பணம்


ஓடி ஓடி உழைத்ததால் ஓய்வு 
எடுக்கிறது வங்கியில் பணம் 
```கருப்பு பணம்``` 
...கவியாழினி... 

பாலியல் குற்றம்


மலராத மொட்டுக்களிலும் 
தேன் உறிஞ்சப்படுகிறது 
```பாலியல் குற்றம்```  
...கவியாழினி... 

Tuesday 19 November 2013

பத்து நிமிடம்


அவசரமாக பணிக்கு போக வெளியில் வர 
பத்துநிமிடம் காக்கவைத்த தங்கை அவளை 
கடிந்துகொண்டு வாசலில் அமர்ந்தேன் 

சாந்தமுடன் வந்த தென்றல் 
மென்மையாக என்னை வருடிச்செல்ல 
என்னுள்ளும் அமைதி பரப்பியது 

எதிரே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் 
பார்வைக்கு குளிர்ச்சியூட்ட இங்குமங்குமாய் 
சிற்சிறு எறும்புகளின் வரிசை கண்ணில் பட்டது 

எங்கே இவற்றின் பயணமென்று என் 
கண்கள் தேட காட்டிகொடுத்தது இறந்துபோன 
ஓர் இலைபுளுவிர்க்கு அங்கே அமைதியான 
முறையில் இறுதி அஞ்சலி நிகழ்ந்ததை 

சற்று என் பார்வை நகர ஈரப்பத மணலில்
 மொய்க்கும் கால்களோடு மரவட்டைகள் 
அங்குமிங்குமாய் எங்கோ எதையோ தேடின 

சற்று நிமிர்ந்தேன் கண்ணாடி இறக்கைகளோடு 
தும்பிகள் வட்டம் கட்டி எதையோ தேடி பறந்தன 

சுற்றி இருந்த மரங்களில் இங்கொன்றும் 
அங்கொன்றுமாய் குயில்கள் பாட ஒன்றாக 
கலந்து சங்கீதம் செவியை கட்டிப்போட்டது , 

வெளியில் எட்டிப்பார்க்க ஆடுகள் 
ஆட்டுக்குட்டிகளோடு இரவு நினைவுகளை 
அசைபோட்டபடி சூரியன் உதயமும் பெரிதாக 

கொள்ளாமல் அமைதியாய் அன்பு
 பகிர்ந்து கொண்டிருந்தன எதையோ தேடியபடி 

சட்டென வந்து நின்ற தங்கையிடம் 
இத்தருனத்திர்க்கு நன்றி கூறி நானும் 
நடைபோட்டேன் எதையோ தேடி ... 

...கவியாழினி ...

Monday 18 November 2013

இவனின் நட்பு


நட்பில் கற்பை 
கண்டவர்களுக்கு
 மத்தியில் 
கற்பில் நட்பை 
கொண்டவர்களுக்கு 
மத்தியில் 
நட்பும் கற்பும் 
ஒன்று என 
உணரவைத்தது 
இவனின் நட்பு 
...கவியாழினி...

Sunday 17 November 2013

நட்பின் பிரிவு


நீயும் நானும் 
நட்போடு 
நடைபயிலையில் 
பூக்களால் 
அட்சதை தூவிய 
மரங்கள்
 நீ பிரிந்து 
நான் மட்டும் 
நடைபோட 
அத்துனையும்
 புயலாய் வீசி 
சருகாய் 
கொட்டுகிறது 
பாவம் 
நம் நட்பின் 
பிரிவை 
அவற்றாலும் 
ஏற்க 
முடியவில்லை 
என்னைப்போல...
...கவியாழினி...

மனம்


மனம் இனிமையானால் 
மௌனத்தின் சப்த்தமும் 
இன்னிசையாக உணரும் !

மனம்  ரணமானால் 
வீணையின் இனிய 
இசையும் முகாரியாகும் !
...கவியாழினி...

Thursday 14 November 2013

இழந்துவிடாதே



பெற்றோரை இழந்தவனென 
உன்னை நீயே கருணையுரைக்காதே 
பெற்றோரை இழந்தாலும் 
நற்பெயர்பெரும் பெருவாழ்வு வாழலாம் 

உறவினர்களால் உதறி 
தள்ளப்பட்டவனென உணர்விழந்து 
ஓரம் போகாதே 
உறவினரை இழந்தாலும் 
உலகில் உன்னத வாழ்வு வாழலாம் 

கல்வி கற்காதவனெனஉன்னை 
நீயே மக்கிக்கொள்ளாதே 
கல்வி இழந்தும் கற்க்காமலும் 
தம் உண்மை அறிவால் கல்வி 
பயில்பவர்களுக்கு வழிக்காட்டியாய் 
வாழ்ந்த பலர்போல் வாழலாம் 

அடிப்படை உரிமைகளையும் அடைய 
முடியாதவனென அழுகி சாகாதே 
உடையின்றி உணவின்றி 
உரைவிடமின்றியும் உன்னத 
உழைப்போடு ஊரே வியக்க 
உன்னத வாழ்வு வாழலாம் 

நண்பர்களும் யாருமற்று 
நாதியற்றவனாய் வாழ்கிறேனென 
நசுங்கிப்போகாதே நாளை உன் 
முன்னேற்றத்தில் நல்லநண்பர்களும் 
உன் பாதையில் தேடி வந்து 
களிக்கும் வாழ்வு வாழலாம் 

பெற்றோரும் மற்றோரும் 
உற்றோரும் நண்பரும் 
உயிரும் இல்லாமலும் 
இவ்வுலகில் நற்பெயரோடு 
புகழோடு பல வாழ்வு வாழலாம் 
நீ தன்னம்பிக்கை 
இழந்து போனால் இருந்தும் 
இறந்தே வாழ்வாய் 

இழந்துவிடாதே எப்போதும் 
உன் வாழ்கையெனும் 
...தன்னம்பிக்கையை...
...கவியாழினி ...

Wednesday 13 November 2013

விவாக(ம்) ரத்து

@@@ விவாக(ம்)ரத்து @@@  

நந்த வனத்து தேன்சிட்டுகளாய் 
சிந்தை சொல் கேளாது 
வந்த நேரங்காலம் பாராது 
விந்தைக் காதல் கொண்டோம் 
அந்த ரத்துப்பறவைகளாய்ப் பறந்து 
அந்தி சாயும்நேரம் மறந்தோம் 
காந்த நிலாவானம் வந்தும் 
நீந்தித் திரிந்தோம் காதலுக்குள் 

காமத்தீ பற்றிவிட நாள்குறித்தோம் 
திரு மனத்திற்கு உறவினரோடு 
கோபத்தீ சூழ்ந்தாலும் கன்றுகளென 
பெரு மனங்கொண்டு முடித்தனர் 
சாபத்தீ தீண்டாமல் வாழவேண்டி 
உறு கொண்டாலும் வாழ்த்தினர் 
வேகத்தீ யாய் மனம்பொங்க 
பெருங் கடலாய் இன்புற்றோம் 

தேனிலவு லயித்துப்போனது மீட்டிய 
கட்டிலினிசை தினம் கேட்டு 
வெண்ணிலவு கரையென தோன்றியது 
வாழ்வினிசை தினம் பார்த்து 
சிறுபிளவு தோன்றியது இல்லறத்தின் 
இனியஇசை மீட்ட வழித்தெரியாமல் 
சிறிதளவு நிம்மதியும் சிதறிப்போனது 
பண்ணிசை புரிதல் தவறியதால் 

புரிந்து பேசிக்கொண்ட மௌனங்கள் 
புரியாமல் பேசிக்கொண்டன இன்று 
பரிந்து பகிர்ந்துகொண்ட தருணங்கள் 
அறியாமல் தகர்ந்து போயின 
செறிந்து வளர்ந்திருந்த அன்பு 
புரிதலில்லாமல் சிதறிப் போயின 
கடிந்து கொள்கிறது ஒவ்வோர்நாளும் 
விடியல் வேண்டா மென்று 

விட்டுக்கொடுத்த மனங்கள் சிறுநேரம் 
விட்டுக்கொடுத்து பேச முடியாமல் 
தட்டிக்கொடுத்து இணைந்த சகிப்புத்தன்மை 
தட்டுக்கெட்டு சலித்துப் போனதால் 
கட்டுப்படுத்த முடியாத அகந்தைக்கோபத்தால் 
மெட்டில்லாத பாடலானது வாழ்வாய் 
எட்டிப்பிடிக்க முடியாத வெண்ணிலாவென 
எட்டிஉதைக்குது வாழ்வு மனதிற்கு 

வெறும் காலங்கடத்தி பேசிய 
நாட்களில் பகிர்ந்து கொள்ளவில்லை 
வருங் காலத்தில் வாழ்வின் 
நாட்களை வகுக்கும் வழிகளை 
பெரும் போராட்டமான வாழ்வினில் 
நாட்கள் இனிநகர வேண்டாமென 
இரு மனங்களும் இணைந்தெடுத்திட்டு 
நாளையோடு விவாக(ம்) ரத்து. 

...கவியாழினி...

Tuesday 12 November 2013

எதையோ தேடுது மனசு


காலை எழுந்து கண் விழித்து 
அவசரமாய் ஆர்ப்பரிக்கும் சூழலில் 
வேலை என்ற பெயரில் ஓடிஓடி 
தயாராகும் நேரமற்ற நேரத்தில் 

ஆளுக்கொரு வழியாய் சொல்லி சொல்லாமலும் 
விடைபெற்று வழியோடு செல்கையில் 
வந்துநிற்கும் நிமிடம் தேனிக்களாய் மொய்க்கும் 
வாகனங்களின் பறக்கும் வேகத்தில் 

இரண்டடி நடையெடுக்க செவியில் விழும் 
ஓராயிரம் அபார சப்த்தத்தில் 
ஓட்டமும் நடையுமாய் முண்டியடித்து செல்லும் 
காலை நேர சாலை பார்க்கையில் 

ஒருரூபாய் முதல் ஓராயிரம் ரூபாய்க்காக 
ஓடிபெருக்கி ஓசை எழுப்பியும் 
ஒய்யாரமாய் அமர்ந்தும் வேலை பார்ப்பவர்களை 
ஒருகணம் உற்றுப் பார்க்கையில் 

வாடியும் மலர்ந்தும் விறுவிறுப்பாய் நுழையும் 
பள்ளி மாணவர்களை பார்க்கையில் 
உணவு வேலையென மனித கூட்டமே 
காத்திருந்து உண்ணும் நேரத்தில் 

வீட்டிற்கு போகும் நேரத்திற்காய் காத்திருந்து 
விடைப்பெற்று சோம்பலாய் செல்கையில் 
சமையலும் படிப்பும் பணி முடிப்புமாய் 
முடித்து ஒன்றுகூடி உன்கையில் 

அவரவர் பணிமுடித்து மன அமைதியோடு 
இரவு படுக்கைக்கு செல்கையில் 
படுத்து கண்கள் மூடிய நிமிடம் 
கண்கள் கண்ணுறக்கம் செல்கையில் 

தினம் தினம் நிமிடமுமாய் நெருடலாய் 
வாழ்க்கையோடு வழக்கம் போல் 
வாழ்ந்து கொண்டு இருந்தாலும் 
எதையோ தேடுது மனசு! 

...கவியாழினி...

Monday 11 November 2013

கேள்விகேள்! கேள்விகேள்!



சிரிப்பும் கோவமும் அழுகையும் 
ஆத்திரமும் உள்ளிருந்து வெளிவர 
சாந்தமுடன் முகம் கொண்டு 
சாந்தமற்ற மனம் கொண்டு 

ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஆர்ப்பரித்து 
அமைதியாக காட்சியளிக்கும் மனத்துள் 
அடக்கமுடியா கேள்விகள் அடிக்கடி 
மேலெழும்பி வந்து சென்றிடும் 

உலகம் உருவானதெப்படி? -அதை 
பார்க்காமல் அறியாமல் அறிவியலென்பதெப்படி? 
உயிர்கள் பிறப்பு உருவானதெப்படி ? 
இறப்பின் பின் நிகழ்வதை அறிவதெப்படி ? 

மரங்களழித்து மனிதன் வாழ்வதெப்படி ? 
மாசு நிறைந்த உலகம் மாறினால் 
நாளை நோய்கள் குறைவதெப்படி? 
தெரிந்தும் நாம் மாசாக்குவதெப்படி? 

எப்படி? எதற்கு? ஏன்? எதனால்? 
எதற்காக? எவ்வாறு ? எங்கு ? 

கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளை 
காண்போரிடமும் கண்ட இடத்திலும் 
வாரி இறைக்காதே வம்பிழுக்காதே 
வழக்கை வாங்கி கட்டிக்கொள்ளாதே 

தேவை ஏற்படும் இடத்தில் 
தெறிக்கட்டும் உன் கேள்விகள் 
பதில் தேடும் வேளையில் 
உதிக்கட்டும் உன் கேள்விகள் 

கேள்விக்கேள் கேள்விக்கேள் 
சிந்தித்து கேள்விகளை கேட்பவர்கள் 
இவ்வுலகில் அறிவாளி 
கேள்விகளுக்கு சரியான பதிலை 
தேடுபவர்கள் புத்திசாலி 

நீ கேள்விகேட்டு கேள்விகேட்டு 
பதில்தேடு ;தேடி தேடி 
தெரிந்துக்கொள் தெளிவுகொள் 

புத்தியுள்ள அறிவாளியாய் மாறிடு 
அறிவுள்ள புத்திசாலியாய் உருவெடு 

கேள்விகள் தொடரட்டும் 
தொடந்து கொண்டே இருக்கட்டும் 
பதில்கள் கிடைக்கட்டும் 
கிடைத்துக்கொண்டே இருக்கட்டும் 

உன் மனதுள் கேள்விக்குறிகள் 
பலவும் பிறக்கட்டும் பிறந்துகொண்டே 
இருக்கட்டும் பதிலும் கிட்டட்டும். 
கேள்விகேள்! கேள்விகேள்! 

...கவியாழினி...

Sunday 10 November 2013

ஏல பேராண்டி சௌக்கியமா சீமாட்டி



ஏல பேராண்டி சௌக்கியமா சீமாட்டி 
உன்ன பாக்கவேண்டி பொலம்புரண்டா உன்பாட்டி 

பாசமான உன் பேரசொல்லி மகிழ்ந்து 
பசுமாட்டில் பால்க் கரந்தன் 

தூங்கி மகிழும் உன் மெய்யழக 
தும்பிக்கிட்ட சொல்லி ரசிச்சன் 

சோம்பல் முறிக்கும் உன் அழக 
சோலை வண்டுகிட்ட பேசி மகிழ்ந்தன் 

பாலகன் உன்ன பார்க்க தவிக்கும் தவிப்பை 
பச்சைகிளியிடம் சொல்லி வச்சன் 

தெள்ளமுது உன் குரல் கேட்ட மகிழ்ச்சிய 
தென்றலையும் கூட்டிவந்து சொல்லி வச்சன் 

பாடம் படிக்கும் உன் அழக பார்த்து ரசிச்சத 
பட்டாம்பூச்சிகிட்ட பகிர்ந்துகிட்டன் 

விளையாடும் உன் அழக அப்படியே 
வெள்ளாட்டு காதுல விவரிச்சன் 

குளிக்க குறும்பு செய்யும் உன் குணத்த 
குயிலுகிட்ட சொல்லி ரசிச்சன் 

சுத்தி சுத்தி ஓடிவரும் உன் சுறுசுறுப்ப 
செவ்வெறும்புகிட்ட சொல்லி மகிழ்ந்தன் 

கண்ணடிக்கும் உன் அழக கண்டுகளிச்சத 
கம்மாகர மீனுகிட்ட கடலளவு சொல்லிவந்தன் 

கோவத்தில் கோச்சிக்குற உன் அழக 
கோழிகுஞ்சுகிட்ட கொஞ்சி மகிழ்ந்தன் 

உன் ஞாபகங்கள் உள்ளிருந்து ஆட்சிசெய்ய 
நிசமா உன்ன பாக்கனுன்னு கோடை 

விடுமுறைய சீக்கிரமா விட சொல்லி நம்ம 
கோணங்கிஅய்யாசாமிக்கு வேண்டிக்கிட்டன் 

சீக்கிரமா வந்துவிடு என் ராசா 
உன்ன பாத்து மகிழவே வச்சிருக்கன் என் உசுர பெருசா 
வரும் பாத பாத்து காத்துருக்கன் உன் ஆத்தா .. 

... கவியாழினி...

எரிகிறது மெழுகுவர்த்தி



இருட்டில் பிறந்து இருட்டில் மடியும் 
வாழ்வினிலே வெளிச்சம் கண்டு 
மனிதனாடும் ஆட்டம் இங்கு 
கொஞ்ச நஞ்சம் அல்லவே 

உழைத்தவனின் உணர்வை கொன்று 
திருடிய பணத்திலே தினமும் வாழ்கிறான் 

Saturday 9 November 2013

வெற்றி மகுடம்



பிறப்பு முதல் இறப்புவரை இங்கு 
அனைவரின் ஆவல் வெற்றியே 

எளிதில் கிடைத்த வெற்றி வெறும் 
எள்ளளவில் மகிழ்ச்சி தரும் 

குறுக்குவழியில் பெற்ற வெற்றி குறுகிய 
நேரத்தில் மறைந்து போகும் 

Thursday 7 November 2013

கற்சிலையும் கண்ணீர் வடிக்கும்



பட்ட படிப்பு படித்து பணிசெய்து 
வீடுகட்டி பாவையிவள் 
கவலையின்றி வாழுகிறாளென 
பேசிடும் ஊரார்க்கு தெரியுமோ 
படாதபாடு பட்டு படிப்படியாய் 
படிப்போடு பணிசெய்து பண்போடு 
அவள் வாழும் வாழ்வு 


உறவாளன் வந்திருந்தும் சிரித்து 
பேச கூட பிடிக்கலையோ சிறுக்கிக்கு 
தனியாகவே வாழ்வை சமாளிக்கும் 
அசட்டு தைரியோமோவென பேசும் 
உறவினருக்கு தெரியுமோ 

Tuesday 5 November 2013

படிக்கிறேன் நானும் துடிக்கிறேன்


பள்ளிக்கூடம்  போயி நானும் 
பாங்காத்தான் படிக்கிறேன் 
அதுக்காக பலபாடு பட்டுக்குறன்

அஆஇஈ அழகா சொல்லிதந்த 
தாய்மொழின்னு என்பாட்டி  தவறியும்
நா பேசிபுட்டா  கட்டிடனும் அபராதம் 

Monday 4 November 2013

ஆணவனின் தாய்மை


பிரசவ அறைக்கு தன் 
மனைவியை அனுப்பி 
வெளிநின்று தவித்து -தன் 
இதயமென்னும் கருவறையில் 
மனைவி பிள்ளையென 
இருவரை சுமந்திருக்க 

Sunday 3 November 2013

விலையேற்றம்


ஓலை வீட்டில் இருந்தாலும் 
ஒய்யாரமாய் நான் வாழ்ந்தேன் 
ஒரு பிடி உண்பதற்கும் என்னை 
ஒருமுறை கடித்து உண்பான் 


உழைத்து வருபவனின் உடல்வலியையும் 

என்னை ரசித்து சாப்பிட மறந்துபோவான் 
இன்று எட்டிநின்று என்னை வேடிக்கை 
பார்த்து விரைந்து செல்கிறான்