Showing posts with label வாழ்க்கை கவிதைகள். Show all posts
Showing posts with label வாழ்க்கை கவிதைகள். Show all posts

Sunday, 14 September 2014

இந்த மனம்


அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
 காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது 

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக 
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் 
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை 
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் 

போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை 
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு 
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை  இந்த மனம் 

சருகுகளின் பாதியிலே வாழ்கை 
பயணித்தாலும் பசுமை புற்களின் 
பச்சை வாசம் மறக்கவில்லை  இந்த மனம் 

அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
 சிரிக்கும் நேரம் வருகையில்  சிரிப்பை 
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம் 

வலியோடு வாழ்க்கை வரமறுத்து 
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் 
அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை 
தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் 

மணி நேரமெல்லாம் மரண வழியாக 
தோன்றினாலும் ஒரு நிமிடம் மலரின் 
முக மலர்சியாய் சிரித்து மகிழும் இந்த மனம்  

தன்னம்பிக்கையோடு தைரியமாய் 
விடாமுயற்சியோடு தன் பாதை  நோக்கி 
பயணத்தை தொடரும் இந்த மனம் 
சில நேரம் என்னையே  பெருமை பட வைக்கிறது.

....கவியாழினிசரண்யா... 

Sunday, 24 August 2014

நெருப்புக் கூண்டு

பறந்து விரிந்த உலகுதன்னில் - சிறகடித்த 
பறவையிவள் எண்ணங்களை எடுத்து 
எரிதீயில் போட்டு பொசுக்குகின்றனர்- சமுதாய 
எதிர்ப்பார்ப்பென்று என்னை ஏமாற்றி 

அறிவு சுரங்கத்தில் அருளிய - பொருளென்று 
அறத்தோடு வளர்த்து அழகுநடைபோட 
புகழ் முன்னேற்றம் பெண்ணிற்கு - வேண்டாமென 
புழுகலேற்றம் மனதில் நிரப்புகிறார்கள் 

பருவ வயதினிலே முடித்திடனும் -திருமணம் 
பக்குவமாயென்று பனிக்கட்டியாய் உருக்கி 
மயக்குகின்றனர்; பள்ளி வயதிலே -பதியம்போட்டு 
மனதில் பசுமரத்தாணியான என்லட்சியத்தை 

உண்மைகளை எடுத்துக் சொன்னால் - ஊரார்க்கு 
உணராத வாயாடியென்று பெயர் 
தற்காப்புக் கலை கற்று - நடைபோட்டால் 
தகாத அடங்காப்பிடாரி இவள் 

சுதந்திரமென சுற்றித்திரிந்து சுடும் -பாதைச்செல்ல 
சுரத்தை இல்லாத பெண்ணல்ல 
அடைப்பட்ட கூண்டில் சுதந்திரமுடன் - வாழ 
அடிமை பெண்ணும் நானல்ல 

சுதந்திர நாட்டினில் சுதந்திரமுடன் - என் 
கூண்டின் சுற்றுத்தளம் என்சுதந்திரம் 
நெகுகிறது என்மனம் ; திறமைகள்  பொசுங்க 
நெருப்பிலிட்ட என்மனம் வேகுகிறது 

(சமூகமென்னும் நெருப்புக் கூண்டுக்குள் அடைப்பட்டு நானிங்கு ,என முன்னேற துடிக்கும் ஒரு பெண்ணின் குமுறல்கள் ) 
...கவியாழினி...

Sunday, 27 July 2014

நின்னோடு என் நினைவுகள்

நீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை 
நீ என்னோடு இருப்பதான நினைவுகள் 
தோற்கடிக்கின்றன ; நீ என்னோடு 
இல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற 
நிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ 

கடற்கரை மணலில் என் கால்தடங்களின் 
அருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி 
இல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே 
எண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான் 

என்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ 
சப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள் 
எழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய் 
வீணை மீட்டிகொன்டே இருக்கிறது 

வருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும் 
சித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன் 
உன் மார்பின் கதகதப்பில் என் தலை வைத்து 
உறங்கிய அந்த சிறு நாட்களோடே ஒவ்வொரு 
இரவும் உறக்கம் கொள்கிறேன் நான் 

எவ்வளவு சோகங்கள் என்னை சூழ்ந்தாலும் 
உன்னோடு வாழ்ந்த நாட்கள் மனதில் ஓட 
மகிழ்ச்சி கொட்டும் ;எத்துனை வேகமாக வந்தாலும் 
என்னை தாண்டி செல்ல மறுக்கிறது உன் நினைவுகள் 

எல்லாவித அழகு ஆடைகளை வாங்கியும் 
அழகு குறைந்தே தோன்றுகிறது பெட்டியில் 
பொக்கிசமாய் உறங்கும் நீ வாங்கித்தந்த 
பாவாடை சட்டையின் அழகின் முன் 

அந்நாட்களில் களைத்து இறங்கி வந்து 
இழைத்த உடம்போடு உணவு உண்கையில் 
உழைத்த உன்மீது வரும் வியர்வை நறுமணத்தை 
வாசித்துகொண்டே இந்நாட்களில் தினமும் 
உண்கிறேன் என் மதிய உணவை 

ஊராரும் உடனிருப்போரும் நீ இல்லையெனலாம் 
என்னுள்ளிருக்கும் உன்னை என்னையன்றி 
உன்னால் கூட உணரமுடியாது "அப்பா " -இவள் 
உன் உணர்வுகளை சுவாசித்து வாழ்வைநேசிப்பவள் 

நான் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தாலும் 
என்றும் நின்னோடு என் நினைவுகள். 


...கவியாழினிசரண்யா...

Saturday, 5 April 2014

தா(பே)ய்மையோடு ஒரு குரல்


மும்மாரி பொழிய வைத்து 
கம்மாவும் நிரம்ப வைத்து 
முத்தாக தானியம் 
விளைய வைத்து 
சுத்தமாக சுவாசிக்க வைத்தேன் 
என் ம(மா)க்களே 

சத்தான உணவோடு 
புத்தியும் தூண்டிவிட்டு 
அறிவியலும் கற்க 
அறிவு வளர்த்தேன் 
ஆக்கங்கள் பெருகிடவே 
களிப்பும் கண்டேன் 
அழிவுகளை அதிகமாக்கி 
ஆடம்பரத்தில் அமிழ்ந்தீர்களே 
என் அன்(வம்)பிற்க்குறியவர்களே 

வண்ண உணவுகளும் 
வாகன பெருக்கமும் 
குளிர்பதன சாதனமும் 
நிமிடத்தில் நிமிரும் உற்பத்தியும் 
அபார வளர்ச்சியென்று 
அடுக்கடுக்காய் மரங்களை 
வெட்டி வாழும் 
என் பி(தொ)ள்(ல்)ளை(லை)களே 

மாடிமேல் மாடியென 
பாரத்தை என் தலையில் வைத்து 
விரைவாக சென்றுவர சுரங்கம் வைத்து 
கழிவுகளை நிரப்பிடவே 
பாதாளத்தில் கொட்டி 
வாழும் மரங்களை வெட்டி 
வலுவான என்னை 
வலுவிழக்க வைத்தீர் 
என் செல்வ(ஜென்ம )ங்களே 

வலி பொருத்து வாழ வைத்தேன் 
வலி தாங்க முடியாமல் போகவே 
பேரழிவுதர ஆட்ப்படுத்தப்பட்டேன் 
இனி என் நிலை என் கையிலில்லை 
வசதிதேடி வாழுமுன்னே - இயற்கை 
வளம் காத்து வாழ்வை வாழப்பாருங்களேன் 
என் மதி(கெ )கொண்(ட்)ட மானிட(ரே)னே. 
  ...கவியாழினிசரண்யா... 


Thursday, 20 March 2014

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

  
பணப்பெட்டி 
வாங்க 
ஆசைகொண்டு 

தீப்பெட்டி 
அடுக்கி 
வாழ்ந்து 

ரண(ம்)கெட்டியாக 
நிலை 
கடந்து 

கனபெட்டியாய் 
செல்ல 
முடிகிறது 

எங்கள் 
வாழ்க்கை 
சவபெட்டியில். 

வேதனையுடன் ஓர் உ(யிர்)டல்

...கவியாழினி...

Wednesday, 12 March 2014

எல்லையற்ற கடலின் ஓர் அலை


பத்துமாதமாய் வயிற்றில் 
தங்கி பிறந்தவனெ(ளெ)ன்றா 
மொத்தமாக கயிற்றில் 
உயிரை விட வந்தாய் ---இல்லை 

ஒரு துளி விந்தில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒரு துளி விசத்தில் உயிரை 
மரிக்க துணிந்தாய் ---இல்லை 

இருவரின் சக்தியும் ஒன்றாகி 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
ஒருவனா(ளா)ய் கத்தியில் 
உயிரை பிரிக்க வந்தாய்---இல்லை 

உன் பெற்றோரின் உடல் 
சூட்டில் பிறந்தவனெ(ளெ)ன்றா 
நெருப்பின் சூட்டில் 
பஸ்பமாக வந்தாய் ---இல்லை 

பனிக்குட நீரில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
பலகுட நீரென கடலில் 
மூழ்க வந்தாய் ---இல்லை 

தலைகீழாய் இவுலகில் 
பிறந்தவனெ(ளெ)ன்றா 
தலைகீழாய் மலையில் 
விழ வந்தாய் ---உணர்வாயோ 

இரு உடல்களின் காமத்தால் 
பிறக்கவில்லை நீ 
இரு உள்ளங்களின் சங்கமத்தால் 
மண்ணில் பிறந்தாய் 

உள்ளுறுப்புக்களின் மாற்றத்தால் 
பிறக்கவில்லை நீ 
உணர்வுகளின் உச்சத்தில் 
உலகில் பிறந்தாய் 

வாழ்வின் வலி தாங்காமல் 
வந்தாயே உயிர் விட 
நினைப்பாயோ ஒருநிமிடம் 
உன்னை உயிரோடு ஈன்றெடுக்க 
உன் தாய் அனுபவித்த வலியை-அதை 
தாண்டியா உன் வாழ்க்கை வலிக்கிறது ? 

உற்றவள் உள்ளிருந்து துடிக்க 
தன்னிலையறியாது தவித்த 
உன் தந்தையின் தவிப்பின் 
வலியை விடவா 
உன் வாழ்கை வலிக்கிறது ? 

சிறு உயிரான உனக்கு வலி 
பொருத்து வாழ்வு தந்த 
அந்த தாய்தந்தை வலிக்காக 
வலி நிறைந்த உன் வாழ்வை 
வாழ்ந்து காட்ட மாட்டாயோ 

வாழ்வின் எல்லை உன்னைவிட்டு 
உன் உயிர் பிரியும் வரை அல்ல 
உன் உள்ளத்தை விட்டு 
உன் தன்னபிக்கை பிரியும் வரை 

பரந்த கடலாய் இவ்வுலகினிலே 
ஓயாத அலைகலென 
எல்லோர்க்கும் ஓர் வாழ்வுண்டு 
அதில் உன் வாழ்வும் 
எல்லையற்ற கடலின் ஓர் அலை ... 

...கவியாழினிசரண்யா...

Thursday, 6 March 2014

காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே


என் முன்னோர்களின் 
எத்துனை தலைமுறைகள் தாண்டி 
இன்று நானிருக்கிறேன்? 

இந்த உலகம் ஐம்பூதங்களில் 
குடிகொண்டு வாழ்வதை 
ஆன்மீகம் என்கிறார்கள் 

இந்த உலகின் ஐம்பூதங்களை 
ஆராய்ந்து வாழ்வதை 
அறிவியல் என்கிறார்கள் 

தியானித்து உலகை மறந்து 
சமாதி நிலை அடைவதுதான் 
ஆன்மீகத்தின் உச்சமென்றால் 

எப்படியும் மனிதன் ஒரு 
தருணத்தில் சமாதி நிலைக்குத் 
தானாகவே செல்கிறானே 

நித்தம் கண்டுபிடிப்புகளும் 
அழிவுகளும் ஆராய்ச்சிகளும்தான் 
அறிவியலின் உச்சம்மென்றால் 

ஒவ்வொரு கணத்திலும் 
இவ்வுலகில் ஒன்று 
அழிவுக்குள்ளாகியும் 
புதிய கண்டுபிடிப்பாகவும் 
உருவாகிறதே ! 

ஒரு துளி விந்தின் 
வெளியேற்றந்தான் 
ஆழ்ந்த அன்பின் 
உச்சமென்றால் 

அதுவும் சிலநேரங்களில் 
திருப்தியடையாத ஒன்றாக 
மாற்றம் பெருவதேன்? 

இங்கே , 
இறப்பையும் பிறப்பையும் தாண்டி 
சூரிய சந்திர உதயமறைவை தாண்டி 
ஆன் பெண் அன்பை தாண்டி 
ஆன்மிக அறிவியலை தாண்டி 

உலகமென்னும் 
நாடக மேடையில் 
மனிதர்களென்னும் 
கதாபாத்திரத்தில் 
நித்தம் ஒரு நாடகம் 
அரங்கேறிகொண்டே 
இருக்கிறது 

தனக்கு எதிரே ஒரு சபை 
தம் நடிப்பை கண்கொட்ட 
பார்த்து கொண்டிருப்பதை 
உணர்ந்து நடிப்பவன் 
உச்சம் பெருகிறவனாகவும் , 

தானே நடிகன் 
தானே பார்வையாளனென 
நடிப்பவனை எச்சமாக 
நினைக்கவைத்தும் 
இந்த உலகம் என்றும் 
சாதா(சதா)ரணமாகவே 
இயங்கிக்கொண்டிருக்கிறது. 

காலங்கள் முடிந்த பின்பு 
ஆடிய ஆட்டங்கள் மறைந்து 
அமைதியாக செல்கிறான் 
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே... 

...கவியாழினி...

Thursday, 2 January 2014

மறுசுழற்சி



நம் மனம் 
ஓர் தண்ணீர் 

சுமைகள் 
பாரங்களாக 
மாறிட 
பனிகட்டியாகிறது 

சுமைகளெல்லாம் 
மறைந்து 
கண்ணீராக 
வெளியேற 

ஆவியாகி 
மறைந்து 
போகிறது 

மறுசுழற்சியானது 
நீர் மட்டுமல்ல 
நம் மனதின் 
எண்ணங்களும் 

...கவியாழினிசரண்யா...

Wednesday, 1 January 2014

இந்த வாழ்வில் இந்த நாள்



நறுமுகை மலர்களின் நந்தவனத்தில் 
நான் கண்டெடுத்த ஒருவகை மலராய் 
இந்த வாழ்வில் இந்த நாள் 
...கவியாழினி...

Wednesday, 18 December 2013

ரணத்தின் தழும்புகள்


கணவனிழந்த   தனிமை பெண்ணிவள் 
தன்மானத்தோடு தனியே வாழ்ந்தால் 
விடவில்லை  காமமுடன் 
கயவர்கூட்டம் மாற்றியது அவளை 
=======விலை மாதுவாய்======

தாய்தந்தையற்று தனித்து கிடந்தான் 
சிறுவனிவன் அலைந்து திரிந்தான் 
பசியின்கொடுமை நீட்டியகையில் ஒன்றும் 
போடவில்லை திருடிஓடி தின்றவனிடம்  
வயிறும் சொல்லவில்லை திருடியதை 
உன்ன மாட்டேனென்று மாறிவிட்டான் 
======திருடனாக====== 

தொலைக்காட்சியும் இணையத்தின் 
வேண்டாத தளங்களும் காட்டியது 
அந்தரங்கத்தை கண்டபடி 
தனித்துக்கொண்டான் காமத்தை 
அடுத்தவீட்டு சிறுமியிடமும் வெளியில் 
சொல்ல தயங்கும் ஊமை 
கண்ணியிடமும் மாறிப்போனான் 
======காமுகனாய்======

வேலைத்தேடி அலைந்தான் உழைக்கிறேன் 
கொடுஎன்றான் கொடுக்கவில்லையாரும் 
பசியின் கொடுமை மாற்றியது வழிபறியில் 
வேலையில்லை என்றவனே வந்துவிட  
இருப்பதை எல்லாம் கொடுத்து உயிர்த்தப்பி 
ஓடினான் இன்று மாறிவிட்டான் பிரபல
 ======அடிதடியாலனாய்======

மன்னிக்க வேண்டிய தவறுகளை 
மலையாக வார்த்தைகளால் வதைத்து 
கொட்டியது சமூகம்; திருத்த வேண்டிய 
சட்டமும் கேளிசெய்யவே வெறுத்துப்போனான்
 வீழ்த்தி தள்ளினான் உயிர் அருமை 
தெரியாமல் இன்று உலா வருகிறான் 
======தீவிரவாதியாய்====== 

பிறப்பதில்லை இங்கு யாரும் 
சமூகதுரோகிகளாய் மாற்றுகிறோம் 
துரோகிகளாய்  நாம்  அன்பும் 
அரவணைப்பும் அடிப்படை 
உரிமையும் இல்லாமல் 
போகவே மாற்றபடுகிறார்கள் 
சமூக துரோகிகளாய் 
படும் ரணங்கள் காயமால் மாற்றமிட 
தழும்புகளாய் மாறுகின்றன 
======ரணத்தின் தழும்புகள்====== 

 ...கவியாழினி...

(இங்கு இப்படைப்பை பதிவதில் எனக்கும் வருத்தமே  இங்கு சுட்டி காட்டும் சூழ்நிலைகளால் மட்டுமே அவர்கள் அப்படி மாற்றம் பெற்றார்கள் என்பது என் கருத்து இல்லை இப்படியெல்லாம் மாற்றமடையும் இவர்களுக்கு நம்மால் முடிந்த அன்பை காட்ட அவர்கள் சமூக விரோதிகளாக  மாற்றம் பெறாமல் தடுக்க முடியும் என்பதே என் கருத்து அதை உணரவே இங்கு இந்த படைப்பு உதாரணம் : பசியில் துடிப்பவனுக்கு ஒரு வேலை உணவு கொடுத்தால் அவன் திருடனாவது இன்றைய பொழுதில் நீ இட்ட ஒரு வேலை சோற்றில்  தடுத்து நிறுத்தப்படும் .)

Tuesday, 17 December 2013

அழகு


அருவிபோல் அடித்து கொட்டும் 
அடைமழையின் அழகை விட 
துளித்துளியாய் விழும் மழைசாரல்  
மனதிற்கு சுகமோடு அழகானது 

ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த 
வாசனை திரவியத்தின் வாசத்தை விட 
மலர்ந்திருந்து மனம் பரப்பும் ஓர்  தோட்டத்து 
 மல்லிகையின் மனம் மனதிற்கு சுகமானது 

இனிப்பு என எடுத்த சுத்தமான 
தேனின் சுவையை விட 
அளவோடு தேனிட்டு செய்த 
தேன்மிட்டாயின் சுவை இனியது 

பின்னிய கூந்தலில் சூடிய 
முழம் முழமான  பூவை விட 
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும் 
ஒற்றை ரோஜா தனி அழகு

பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில் 
வாழும் வசதி ஆடம்பர  வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து 
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும் 
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு .
...கவியாழினி...  

Sunday, 1 December 2013

நீர் குமிழிகள்


நீர் நிலைகளில் 
வந்து 
மறைவது போல் 
வாழ்விலும் 
இன்பங்களும் 
துன்பங்களும் 
நீர் குமிழிகளாய் 
...கவியாழினி ...

Tuesday, 19 November 2013

பத்து நிமிடம்


அவசரமாக பணிக்கு போக வெளியில் வர 
பத்துநிமிடம் காக்கவைத்த தங்கை அவளை 
கடிந்துகொண்டு வாசலில் அமர்ந்தேன் 

சாந்தமுடன் வந்த தென்றல் 
மென்மையாக என்னை வருடிச்செல்ல 
என்னுள்ளும் அமைதி பரப்பியது 

எதிரே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் 
பார்வைக்கு குளிர்ச்சியூட்ட இங்குமங்குமாய் 
சிற்சிறு எறும்புகளின் வரிசை கண்ணில் பட்டது 

எங்கே இவற்றின் பயணமென்று என் 
கண்கள் தேட காட்டிகொடுத்தது இறந்துபோன 
ஓர் இலைபுளுவிர்க்கு அங்கே அமைதியான 
முறையில் இறுதி அஞ்சலி நிகழ்ந்ததை 

சற்று என் பார்வை நகர ஈரப்பத மணலில்
 மொய்க்கும் கால்களோடு மரவட்டைகள் 
அங்குமிங்குமாய் எங்கோ எதையோ தேடின 

சற்று நிமிர்ந்தேன் கண்ணாடி இறக்கைகளோடு 
தும்பிகள் வட்டம் கட்டி எதையோ தேடி பறந்தன 

சுற்றி இருந்த மரங்களில் இங்கொன்றும் 
அங்கொன்றுமாய் குயில்கள் பாட ஒன்றாக 
கலந்து சங்கீதம் செவியை கட்டிப்போட்டது , 

வெளியில் எட்டிப்பார்க்க ஆடுகள் 
ஆட்டுக்குட்டிகளோடு இரவு நினைவுகளை 
அசைபோட்டபடி சூரியன் உதயமும் பெரிதாக 

கொள்ளாமல் அமைதியாய் அன்பு
 பகிர்ந்து கொண்டிருந்தன எதையோ தேடியபடி 

சட்டென வந்து நின்ற தங்கையிடம் 
இத்தருனத்திர்க்கு நன்றி கூறி நானும் 
நடைபோட்டேன் எதையோ தேடி ... 

...கவியாழினி ...

Wednesday, 13 November 2013

விவாக(ம்) ரத்து

@@@ விவாக(ம்)ரத்து @@@  

நந்த வனத்து தேன்சிட்டுகளாய் 
சிந்தை சொல் கேளாது 
வந்த நேரங்காலம் பாராது 
விந்தைக் காதல் கொண்டோம் 
அந்த ரத்துப்பறவைகளாய்ப் பறந்து 
அந்தி சாயும்நேரம் மறந்தோம் 
காந்த நிலாவானம் வந்தும் 
நீந்தித் திரிந்தோம் காதலுக்குள் 

காமத்தீ பற்றிவிட நாள்குறித்தோம் 
திரு மனத்திற்கு உறவினரோடு 
கோபத்தீ சூழ்ந்தாலும் கன்றுகளென 
பெரு மனங்கொண்டு முடித்தனர் 
சாபத்தீ தீண்டாமல் வாழவேண்டி 
உறு கொண்டாலும் வாழ்த்தினர் 
வேகத்தீ யாய் மனம்பொங்க 
பெருங் கடலாய் இன்புற்றோம் 

தேனிலவு லயித்துப்போனது மீட்டிய 
கட்டிலினிசை தினம் கேட்டு 
வெண்ணிலவு கரையென தோன்றியது 
வாழ்வினிசை தினம் பார்த்து 
சிறுபிளவு தோன்றியது இல்லறத்தின் 
இனியஇசை மீட்ட வழித்தெரியாமல் 
சிறிதளவு நிம்மதியும் சிதறிப்போனது 
பண்ணிசை புரிதல் தவறியதால் 

புரிந்து பேசிக்கொண்ட மௌனங்கள் 
புரியாமல் பேசிக்கொண்டன இன்று 
பரிந்து பகிர்ந்துகொண்ட தருணங்கள் 
அறியாமல் தகர்ந்து போயின 
செறிந்து வளர்ந்திருந்த அன்பு 
புரிதலில்லாமல் சிதறிப் போயின 
கடிந்து கொள்கிறது ஒவ்வோர்நாளும் 
விடியல் வேண்டா மென்று 

விட்டுக்கொடுத்த மனங்கள் சிறுநேரம் 
விட்டுக்கொடுத்து பேச முடியாமல் 
தட்டிக்கொடுத்து இணைந்த சகிப்புத்தன்மை 
தட்டுக்கெட்டு சலித்துப் போனதால் 
கட்டுப்படுத்த முடியாத அகந்தைக்கோபத்தால் 
மெட்டில்லாத பாடலானது வாழ்வாய் 
எட்டிப்பிடிக்க முடியாத வெண்ணிலாவென 
எட்டிஉதைக்குது வாழ்வு மனதிற்கு 

வெறும் காலங்கடத்தி பேசிய 
நாட்களில் பகிர்ந்து கொள்ளவில்லை 
வருங் காலத்தில் வாழ்வின் 
நாட்களை வகுக்கும் வழிகளை 
பெரும் போராட்டமான வாழ்வினில் 
நாட்கள் இனிநகர வேண்டாமென 
இரு மனங்களும் இணைந்தெடுத்திட்டு 
நாளையோடு விவாக(ம்) ரத்து. 

...கவியாழினி...

Tuesday, 12 November 2013

எதையோ தேடுது மனசு


காலை எழுந்து கண் விழித்து 
அவசரமாய் ஆர்ப்பரிக்கும் சூழலில் 
வேலை என்ற பெயரில் ஓடிஓடி 
தயாராகும் நேரமற்ற நேரத்தில் 

ஆளுக்கொரு வழியாய் சொல்லி சொல்லாமலும் 
விடைபெற்று வழியோடு செல்கையில் 
வந்துநிற்கும் நிமிடம் தேனிக்களாய் மொய்க்கும் 
வாகனங்களின் பறக்கும் வேகத்தில் 

இரண்டடி நடையெடுக்க செவியில் விழும் 
ஓராயிரம் அபார சப்த்தத்தில் 
ஓட்டமும் நடையுமாய் முண்டியடித்து செல்லும் 
காலை நேர சாலை பார்க்கையில் 

ஒருரூபாய் முதல் ஓராயிரம் ரூபாய்க்காக 
ஓடிபெருக்கி ஓசை எழுப்பியும் 
ஒய்யாரமாய் அமர்ந்தும் வேலை பார்ப்பவர்களை 
ஒருகணம் உற்றுப் பார்க்கையில் 

வாடியும் மலர்ந்தும் விறுவிறுப்பாய் நுழையும் 
பள்ளி மாணவர்களை பார்க்கையில் 
உணவு வேலையென மனித கூட்டமே 
காத்திருந்து உண்ணும் நேரத்தில் 

வீட்டிற்கு போகும் நேரத்திற்காய் காத்திருந்து 
விடைப்பெற்று சோம்பலாய் செல்கையில் 
சமையலும் படிப்பும் பணி முடிப்புமாய் 
முடித்து ஒன்றுகூடி உன்கையில் 

அவரவர் பணிமுடித்து மன அமைதியோடு 
இரவு படுக்கைக்கு செல்கையில் 
படுத்து கண்கள் மூடிய நிமிடம் 
கண்கள் கண்ணுறக்கம் செல்கையில் 

தினம் தினம் நிமிடமுமாய் நெருடலாய் 
வாழ்க்கையோடு வழக்கம் போல் 
வாழ்ந்து கொண்டு இருந்தாலும் 
எதையோ தேடுது மனசு! 

...கவியாழினி...

Thursday, 7 November 2013

கற்சிலையும் கண்ணீர் வடிக்கும்



பட்ட படிப்பு படித்து பணிசெய்து 
வீடுகட்டி பாவையிவள் 
கவலையின்றி வாழுகிறாளென 
பேசிடும் ஊரார்க்கு தெரியுமோ 
படாதபாடு பட்டு படிப்படியாய் 
படிப்போடு பணிசெய்து பண்போடு 
அவள் வாழும் வாழ்வு 


உறவாளன் வந்திருந்தும் சிரித்து 
பேச கூட பிடிக்கலையோ சிறுக்கிக்கு 
தனியாகவே வாழ்வை சமாளிக்கும் 
அசட்டு தைரியோமோவென பேசும் 
உறவினருக்கு தெரியுமோ 

Monday, 4 November 2013

ஆணவனின் தாய்மை


பிரசவ அறைக்கு தன் 
மனைவியை அனுப்பி 
வெளிநின்று தவித்து -தன் 
இதயமென்னும் கருவறையில் 
மனைவி பிள்ளையென 
இருவரை சுமந்திருக்க 

Sunday, 6 October 2013

மீட்டா இசை

மீட்டாமலே 
இசைப்பாடுகிறது  
வீணை 

உன் 
பொன்விரல்கள்
அதன்மேல் 
பட்டதால் ...
...கவியாழினி...


Thursday, 3 October 2013

ஞாபகமறதி


ஞாபகமிருக்க 
வேண்டியவற்றை 
====மறந்தும்==== 
மறக்க 
வேண்டியவற்றை 
====ஞாபகித்தும்==== 
மறந்த நினைவுகள் 
ஞாபகம் வருகையில் 
ஞாபகங்கள் சிலநேரம் 
====மறதியாகி==== 
இன்பமும் துன்பமுமாய் 
இனிய நம் வாழ்வில் 
====ஞாபகமறதிகள்==== 

...கவியாழினி ...

Thursday, 19 September 2013

புன்னகைப் பூக்கள்

உள்ளத்தில் சுமையிருந்தாலும்
உதடுகளில் புன்னகை மலர 
உலகத்தவரின் உதடுகளிலும்
உதிக்க வைப்போம் புன்னகை பூக்களை ...  
...கவியாழினி...