Tuesday 17 December 2013

அழகு


அருவிபோல் அடித்து கொட்டும் 
அடைமழையின் அழகை விட 
துளித்துளியாய் விழும் மழைசாரல்  
மனதிற்கு சுகமோடு அழகானது 

ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த 
வாசனை திரவியத்தின் வாசத்தை விட 
மலர்ந்திருந்து மனம் பரப்பும் ஓர்  தோட்டத்து 
 மல்லிகையின் மனம் மனதிற்கு சுகமானது 

இனிப்பு என எடுத்த சுத்தமான 
தேனின் சுவையை விட 
அளவோடு தேனிட்டு செய்த 
தேன்மிட்டாயின் சுவை இனியது 

பின்னிய கூந்தலில் சூடிய 
முழம் முழமான  பூவை விட 
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும் 
ஒற்றை ரோஜா தனி அழகு

பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில் 
வாழும் வசதி ஆடம்பர  வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து 
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும் 
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு .
...கவியாழினி...  

1 comment:

  1. valaithala natpirkku vaalvu kuraivuthaan kavithai arumai sako

    ReplyDelete