Showing posts with label இயற்கை கவிதைகள். Show all posts
Showing posts with label இயற்கை கவிதைகள். Show all posts
Sunday, 13 April 2014
Saturday, 5 April 2014
தா(பே)ய்மையோடு ஒரு குரல்
மும்மாரி பொழிய வைத்து
கம்மாவும் நிரம்ப வைத்து
முத்தாக தானியம்
விளைய வைத்து
சுத்தமாக சுவாசிக்க வைத்தேன்
என் ம(மா)க்களே
சத்தான உணவோடு
புத்தியும் தூண்டிவிட்டு
அறிவியலும் கற்க
அறிவு வளர்த்தேன்
ஆக்கங்கள் பெருகிடவே
களிப்பும் கண்டேன்
அழிவுகளை அதிகமாக்கி
ஆடம்பரத்தில் அமிழ்ந்தீர்களே
என் அன்(வம்)பிற்க்குறியவர்களே
வண்ண உணவுகளும்
வாகன பெருக்கமும்
குளிர்பதன சாதனமும்
நிமிடத்தில் நிமிரும் உற்பத்தியும்
அபார வளர்ச்சியென்று
அடுக்கடுக்காய் மரங்களை
வெட்டி வாழும்
என் பி(தொ)ள்(ல்)ளை(லை)களே
மாடிமேல் மாடியென
பாரத்தை என் தலையில் வைத்து
விரைவாக சென்றுவர சுரங்கம் வைத்து
கழிவுகளை நிரப்பிடவே
பாதாளத்தில் கொட்டி
வாழும் மரங்களை வெட்டி
வலுவான என்னை
வலுவிழக்க வைத்தீர்
என் செல்வ(ஜென்ம )ங்களே
வலி பொருத்து வாழ வைத்தேன்
வலி தாங்க முடியாமல் போகவே
பேரழிவுதர ஆட்ப்படுத்தப்பட்டேன்
இனி என் நிலை என் கையிலில்லை
வசதிதேடி வாழுமுன்னே - இயற்கை
வளம் காத்து வாழ்வை வாழப்பாருங்களேன்
என் மதி(கெ )கொண்(ட்)ட மானிட(ரே)னே.
...கவியாழினிசரண்யா...
Sunday, 23 February 2014
அகவை நூறு
பதினெட்டு மாதத்தில் வடிக்கப்பட்ட சிலையே
தமிழின் பெருமைக்கு வைக்கமுடியாத விலையே
பதினெட்டாயிரம் டன் சல்லிகளும் எஃகுஇரும்பும்
ஐயாயிரம் டன் சாந்தும் கலந்த கலவையே
வருடங்கள் பல கடந்தும் ஒருமுறையே தன்னை
புதுப்பித்து மெருகேற்றிய குமரிப்பெண்ணே
கடல் கொந்தளிப்பு அதிகம் நிகழும்
பகுதியிலிருந்தும் சமாளித்து பிரச்சனை
காட்டிகொள்ளாத குடும்ப பெண்ணே
காலங்கள் கடந்தும் வருவோர்க்கு கம்பீரமாய்
காட்சி தரும் எழிலோவிய மழலையே
தனுஷ்கோடி புயலிலும் சிறிதும் ஆட்டம்
காட்டாமல் வலிமை மிகுந்திருந்த ஆண்மையே
இரண்டு கிலோ மீட்டரில் கால் நீட்டி உறங்கும்
வயோதிக கொள்ளு பாட்டியே (தாத்தாவே)
வருவோரை மடியில் சுமந்து வழிகாட்டி
உரிய இடம் சேர்க்கும் தாய்மையே
இந்தியநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும்
இணைக்கும் ஒரே இணைப்பு பாலமென
சிறந்து விளங்கும் குருவே
இன்றோடு உனக்கு அகவை நூறு - என்றும்
சிறக்கும் உன்னால் தமிழனின் பேரு
...கவியாழினி...
Saturday, 22 February 2014
Friday, 3 January 2014
பால்வழியில் பாவையிவள்
பால்வழியில் பாவையிவள்
வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள்
வட்டமிட்டு பறந்துவர
நட்போடு என்னை அழைத்துச்சென்று
இறக்கிவிட்டன
வெண்பஞ்சு வானமென்னும்
மெத்தையிலே நானும் விழ
புகை மண்டல தேவதைகள்
கைப்பிடித்து அழைத்துச்செல்ல
வானவில்லால் கட்டிய நிலவு
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன
நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து
ஒன்றுகூடி ஒளி வீச
சூரியனும் தூர நின்று கடும்
குளிரை மறையச் செய்ய
பூமி வந்து அருகமர்ந்து
பசுமைஎன்னும் விசிறி வீச
கோள்களெல்லாம் என்னை
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட
பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது
இவளுக்கு உணவு பரிமாற்றம்
வானின் விண்கற்கள் இவள் நடைபயில
இடம் விட்டு நகர்ந்து செல்ல
குளிர்காற்று செல்லமாக மெல்ல வந்து
அந்த பல்லாக்கு ஊஞ்சலில் ஆட்டிவிட
மேகம் சூழ்ந்த தென்றலது தாலாட்டுபாடிட
கண்ணுரங்கினேன் நான் கண்ணுரங்கினேன்
விழித்துப்பார்த்தேன், வாழ்ந்துகொண்டிருந்தது
வானுலகமல்ல கனவுலகமென்று உணர்ந்தேன்
பால்வழியில் பாவையிவள் மனம்மகிழ்ந்தேன்
இந்த மண்ணுலகிற்கு விண்ணுலகை ஓர்நாள்
விருந்துக்கு அழைத்துவர ஆசைகொண்டேன்.
...கவியாழினி...
Thursday, 2 January 2014
Thursday, 19 December 2013
இயற்கையின் காதல் மறுசுழற்சி
மேகமகளிடம் காதல் கொண்ட
காற்று வாலிபன்
காதல் ஆசையில் தீண்டிட
கருவாக உருவாகும்
மழைத்துளி மகள் அவள்
வாழ ஆசைகொண்டு பூமிநோக்கிட
வரும் வழியில்
காலங்கள் மாறிவர பூப்பெய்தும்
அவளை தீண்டிடாமல்
மக்கள் குடைகளுக்குள் தஞ்சமுற
மீறியும் தீண்டிவிட்டால்
நடக்கிறது தலை குளியல்
அவளின் வருகையில் மகிழ்ந்து
ஆற்றங்கரைகளிலும் ஓடைகளிலும்
நடக்கிறது மகிழ்ச்சி திருவிழாக்கள்
பருவக்காதல் அவளையும்
எட்டிவிட நிகழ்கிறது சூரியனோடு
காதல் திருமணம்
மணந்த அவனோடு சங்கமித்து
மகிழ்ச்சி வாழ்வில்
ஆவியாகி அவனை சென்றடைய
காதல் கணவன்
அன்பில் மறந்து போகிறாள்
வாழ்ந்த பூமி
காய்ந்து கொண்டிருப்பதை
பூமி ஈன்ற மகள்களாம்
மரங்கள் தாயைகாக்க
மேக மகளுக்கு முறையாக
ஈன்றெடுக்கின்றன காற்றென்னும்
மகனை மீண்டும் நடக்கிறது
இயற்கையின் காதல் மறுசுழற்ச்சி
...கவியாழினி...
Tuesday, 17 December 2013
அழகு
அருவிபோல் அடித்து கொட்டும்
அடைமழையின் அழகை விட
துளித்துளியாய் விழும் மழைசாரல்
மனதிற்கு சுகமோடு அழகானது
ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த
வாசனை திரவியத்தின் வாசத்தை விட
மலர்ந்திருந்து மனம் பரப்பும் ஓர் தோட்டத்து
மல்லிகையின் மனம் மனதிற்கு சுகமானது
இனிப்பு என எடுத்த சுத்தமான
தேனின் சுவையை விட
அளவோடு தேனிட்டு செய்த
தேன்மிட்டாயின் சுவை இனியது
பின்னிய கூந்தலில் சூடிய
முழம் முழமான பூவை விட
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும்
ஒற்றை ரோஜா தனி அழகு
பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில்
வாழும் வசதி ஆடம்பர வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும்
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு .
...கவியாழினி...
Monday, 2 December 2013
நீயும் என்னைப்போல
அன்பிலே மூழ்கச் செய்து
கண்களால் காதல் வலைவீசி
வார்த்தையில் அமிழ்தம் ஊட்டி
இருளை ரசிக்க வைத்து
வானவில்லாய் வாழ்வை மாற்றி
கட்டிலுக்கு ஆசை மூட்டி
மலர்ந்த மலரின் மகிழ்வை காட்டி
மாலை நேரத்தில் மயக்கம் தந்து
காணும் காட்சிகளை அவனாக்கி
மேனி தொடும் தென்றலை அவன்
மூச்சுக்காற்றாய் உணரவைத்து
தனிமையை நெருப்பாக்கி
இளமையினை வாட்டி வதைத்து
வரவிற்காய் காத்திருக்க வைத்த
என் காதலனுக்காய் வருகை பார்த்து
```தவிக்கும் என்போல் நீயும் ```
உன் காதலன் அருகிலிருக்க
வளர்பிறையாய் வளர்ந்து
மகிழ்ச்சியில் மிளிர்கிறாய்
உன்னை விட்டு விலகிப்போகும்
நாட்களில் தேய்பிறையாய்
தேய்ந்து மடிகிறாயோ
```நிலவே நீயும் என்னைப்போல```
...கவியாழினி ...
Tuesday, 19 November 2013
பத்து நிமிடம்
அவசரமாக பணிக்கு போக வெளியில் வர
பத்துநிமிடம் காக்கவைத்த தங்கை அவளை
கடிந்துகொண்டு வாசலில் அமர்ந்தேன்
சாந்தமுடன் வந்த தென்றல்
மென்மையாக என்னை வருடிச்செல்ல
என்னுள்ளும் அமைதி பரப்பியது
எதிரே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்
பார்வைக்கு குளிர்ச்சியூட்ட இங்குமங்குமாய்
சிற்சிறு எறும்புகளின் வரிசை கண்ணில் பட்டது
எங்கே இவற்றின் பயணமென்று என்
கண்கள் தேட காட்டிகொடுத்தது இறந்துபோன
ஓர் இலைபுளுவிர்க்கு அங்கே அமைதியான
முறையில் இறுதி அஞ்சலி நிகழ்ந்ததை
சற்று என் பார்வை நகர ஈரப்பத மணலில்
மொய்க்கும் கால்களோடு மரவட்டைகள்
அங்குமிங்குமாய் எங்கோ எதையோ தேடின
சற்று நிமிர்ந்தேன் கண்ணாடி இறக்கைகளோடு
தும்பிகள் வட்டம் கட்டி எதையோ தேடி பறந்தன
சுற்றி இருந்த மரங்களில் இங்கொன்றும்
அங்கொன்றுமாய் குயில்கள் பாட ஒன்றாக
கலந்து சங்கீதம் செவியை கட்டிப்போட்டது ,
வெளியில் எட்டிப்பார்க்க ஆடுகள்
ஆட்டுக்குட்டிகளோடு இரவு நினைவுகளை
அசைபோட்டபடி சூரியன் உதயமும் பெரிதாக
கொள்ளாமல் அமைதியாய் அன்பு
பகிர்ந்து கொண்டிருந்தன எதையோ தேடியபடி
சட்டென வந்து நின்ற தங்கையிடம்
இத்தருனத்திர்க்கு நன்றி கூறி நானும்
நடைபோட்டேன் எதையோ தேடி ...
...கவியாழினி ...
Monday, 14 October 2013
Thursday, 10 October 2013
Saturday, 5 October 2013
மழையோடு ஓர் கற்பனை உறவு
இதமான மழைச்சாரலுடன்
இலகுவான நடை நடக்க
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!!
மோகம் கொண்டு வந்து
தேகம் தீண்ட நினைத்து கல்லில்
தெறித்த பின் தெளிந்தாயோ
அனுமதியில்லாமல் - பெண்மை
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!!
உள்ளம் புரிந்து என் இதழ்களில்
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க
முத்தமிடுகிறாயே எப்படி
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல்
உன்னுள்ளும் இருந்ததோ!!!
நனைந்தபடி நான் செல்ல தலை
துவட்டிய தாயின் அன்பில்
உணர்ந்தேன் உன் தாய்மையை
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால்
என்னை தலை குளிக்கவைத்தாய்!!!
நனைந்த புத்தகத்தை பாதுகாக்க
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம்
மிதமானது உன் வேகம் புரிந்தேன்
தோழமை உணர்வுகொண்டு - என்
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!!
...கவியாழினி...
Wednesday, 2 October 2013
மழையே
சோலைக்கு வரும் சோகம்
உடனே தீர்க்கவரும் மேகம்
உயிரினங்களுக்கு நீங்கும் தாகம்
மயில்களுக்கு ஏற்படும் மோகம்
சில்லென்ற உணர்வடையும் தேகம்
தூரமாக ஓடிபோகும் சோகம்
வீட்டுக்குள் மகிழ்ச்சி வரும்வேகம்
மனிதவாழ்வில் இது ஒரு பாகம்
கிடைத்திடுமே நீர் உலகின் ஏகம்
அதனால் செழித்திடுமே முப்போகம்
இதற்காக எத்துனையோ யாகம்
ஏதும் நடத்தாமல் வதுவிடுமென யூகம்
இவற்றை நினைக்கையில் வரும் ராகம்
இயற்கையால் நமக்கு கிடைத்த யோகம்
இனிய கொடை மழையே
...கவியாழினி...
Subscribe to:
Posts (Atom)




.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)

