Showing posts with label இயற்கை கவிதைகள். Show all posts
Showing posts with label இயற்கை கவிதைகள். Show all posts

Sunday, 13 April 2014

ஊர்வலம்


திருவாரூர் தேர் 
நகர்ந்தால் 
அது 
நகர்வலம் 

பெண்ணே 
நீ 
அங்கு 
நடந்தால் 

அந்த தேரும் 
உன் பின் 
வரும் 
ஊர்வலம் . 

...கவியாழினிசரண்யா ...

Saturday, 5 April 2014

தா(பே)ய்மையோடு ஒரு குரல்


மும்மாரி பொழிய வைத்து 
கம்மாவும் நிரம்ப வைத்து 
முத்தாக தானியம் 
விளைய வைத்து 
சுத்தமாக சுவாசிக்க வைத்தேன் 
என் ம(மா)க்களே 

சத்தான உணவோடு 
புத்தியும் தூண்டிவிட்டு 
அறிவியலும் கற்க 
அறிவு வளர்த்தேன் 
ஆக்கங்கள் பெருகிடவே 
களிப்பும் கண்டேன் 
அழிவுகளை அதிகமாக்கி 
ஆடம்பரத்தில் அமிழ்ந்தீர்களே 
என் அன்(வம்)பிற்க்குறியவர்களே 

வண்ண உணவுகளும் 
வாகன பெருக்கமும் 
குளிர்பதன சாதனமும் 
நிமிடத்தில் நிமிரும் உற்பத்தியும் 
அபார வளர்ச்சியென்று 
அடுக்கடுக்காய் மரங்களை 
வெட்டி வாழும் 
என் பி(தொ)ள்(ல்)ளை(லை)களே 

மாடிமேல் மாடியென 
பாரத்தை என் தலையில் வைத்து 
விரைவாக சென்றுவர சுரங்கம் வைத்து 
கழிவுகளை நிரப்பிடவே 
பாதாளத்தில் கொட்டி 
வாழும் மரங்களை வெட்டி 
வலுவான என்னை 
வலுவிழக்க வைத்தீர் 
என் செல்வ(ஜென்ம )ங்களே 

வலி பொருத்து வாழ வைத்தேன் 
வலி தாங்க முடியாமல் போகவே 
பேரழிவுதர ஆட்ப்படுத்தப்பட்டேன் 
இனி என் நிலை என் கையிலில்லை 
வசதிதேடி வாழுமுன்னே - இயற்கை 
வளம் காத்து வாழ்வை வாழப்பாருங்களேன் 
என் மதி(கெ )கொண்(ட்)ட மானிட(ரே)னே. 
  ...கவியாழினிசரண்யா... 


Sunday, 23 February 2014

அகவை நூறு


பதினெட்டு மாதத்தில் வடிக்கப்பட்ட சிலையே 
தமிழின் பெருமைக்கு வைக்கமுடியாத விலையே 

பதினெட்டாயிரம் டன் சல்லிகளும் எஃகுஇரும்பும் 
ஐயாயிரம் டன் சாந்தும் கலந்த கலவையே 

வருடங்கள் பல கடந்தும் ஒருமுறையே தன்னை 
புதுப்பித்து மெருகேற்றிய குமரிப்பெண்ணே 

கடல் கொந்தளிப்பு அதிகம் நிகழும் 
பகுதியிலிருந்தும் சமாளித்து பிரச்சனை 
காட்டிகொள்ளாத குடும்ப பெண்ணே 

காலங்கள் கடந்தும் வருவோர்க்கு கம்பீரமாய் 
காட்சி தரும் எழிலோவிய மழலையே 

தனுஷ்கோடி புயலிலும் சிறிதும் ஆட்டம் 
காட்டாமல் வலிமை மிகுந்திருந்த ஆண்மையே 

இரண்டு கிலோ மீட்டரில் கால் நீட்டி உறங்கும் 
வயோதிக கொள்ளு பாட்டியே (தாத்தாவே) 

வருவோரை மடியில் சுமந்து வழிகாட்டி 
உரிய இடம் சேர்க்கும் தாய்மையே 

இந்தியநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் 
இணைக்கும் ஒரே இணைப்பு பாலமென 
சிறந்து விளங்கும் குருவே 

இன்றோடு உனக்கு அகவை நூறு - என்றும் 
சிறக்கும் உன்னால் தமிழனின் பேரு 

...கவியாழினி...

Saturday, 22 February 2014

வசந்தம்



வாசித்த உடன் வசந்தம் வருமென்று
யாரோ வடித்த வர்ணனை வதந்தியை
மனதில் வாங்கிக்கொண்டு மலரை
வாசிக்க பறக்கிறது இந்த வண்ணாத்துப்பூச்சி ...
...கவியாழினி...



Friday, 3 January 2014

பால்வழியில் பாவையிவள்


பால்வழியில் பாவையிவள்  
வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் 
வட்டமிட்டு பறந்துவர 
நட்போடு என்னை அழைத்துச்சென்று
இறக்கிவிட்டன 

வெண்பஞ்சு வானமென்னும் 
மெத்தையிலே நானும் விழ 

புகை மண்டல தேவதைகள் 
கைப்பிடித்து அழைத்துச்செல்ல 

வானவில்லால் கட்டிய நிலவு 
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன 

நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து 
ஒன்றுகூடி ஒளி வீச 

சூரியனும் தூர நின்று கடும் 
குளிரை மறையச் செய்ய 

பூமி வந்து அருகமர்ந்து 
பசுமைஎன்னும் விசிறி வீச 

கோள்களெல்லாம் என்னை 
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட 

பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது 
இவளுக்கு உணவு பரிமாற்றம் 

வானின் விண்கற்கள் இவள் நடைபயில 
இடம் விட்டு நகர்ந்து செல்ல 

குளிர்காற்று செல்லமாக மெல்ல வந்து 
அந்த பல்லாக்கு ஊஞ்சலில் ஆட்டிவிட 

மேகம் சூழ்ந்த தென்றலது தாலாட்டுபாடிட 
கண்ணுரங்கினேன் நான் கண்ணுரங்கினேன் 

விழித்துப்பார்த்தேன், வாழ்ந்துகொண்டிருந்தது 
வானுலகமல்ல கனவுலகமென்று உணர்ந்தேன் 

பால்வழியில் பாவையிவள் மனம்மகிழ்ந்தேன் 
இந்த மண்ணுலகிற்கு விண்ணுலகை ஓர்நாள் 
விருந்துக்கு அழைத்துவர ஆசைகொண்டேன். 

...கவியாழினி...

Thursday, 2 January 2014

மறுசுழற்சி



நம் மனம் 
ஓர் தண்ணீர் 

சுமைகள் 
பாரங்களாக 
மாறிட 
பனிகட்டியாகிறது 

சுமைகளெல்லாம் 
மறைந்து 
கண்ணீராக 
வெளியேற 

ஆவியாகி 
மறைந்து 
போகிறது 

மறுசுழற்சியானது 
நீர் மட்டுமல்ல 
நம் மனதின் 
எண்ணங்களும் 

...கவியாழினிசரண்யா...

Thursday, 19 December 2013

இயற்கையின் காதல் மறுசுழற்சி


மேகமகளிடம் காதல் கொண்ட 
காற்று வாலிபன் 
காதல் ஆசையில் தீண்டிட 
கருவாக உருவாகும் 
மழைத்துளி மகள் அவள் 

வாழ ஆசைகொண்டு பூமிநோக்கிட 
வரும் வழியில் 
காலங்கள் மாறிவர பூப்பெய்தும் 
அவளை தீண்டிடாமல் 
மக்கள் குடைகளுக்குள் தஞ்சமுற 
மீறியும் தீண்டிவிட்டால் 
நடக்கிறது தலை குளியல் 

அவளின் வருகையில் மகிழ்ந்து
ஆற்றங்கரைகளிலும் ஓடைகளிலும் 
நடக்கிறது மகிழ்ச்சி திருவிழாக்கள் 
பருவக்காதல் அவளையும் 
எட்டிவிட நிகழ்கிறது சூரியனோடு 
காதல் திருமணம் 

மணந்த அவனோடு சங்கமித்து 
மகிழ்ச்சி வாழ்வில் 
ஆவியாகி அவனை சென்றடைய 
காதல் கணவன் 
அன்பில் மறந்து போகிறாள் 
வாழ்ந்த பூமி 
காய்ந்து கொண்டிருப்பதை 

பூமி ஈன்ற மகள்களாம் 
மரங்கள் தாயைகாக்க 
மேக மகளுக்கு முறையாக 
ஈன்றெடுக்கின்றன காற்றென்னும் 
மகனை மீண்டும் நடக்கிறது 
இயற்கையின் காதல் மறுசுழற்ச்சி 

...கவியாழினி...

Tuesday, 17 December 2013

அழகு


அருவிபோல் அடித்து கொட்டும் 
அடைமழையின் அழகை விட 
துளித்துளியாய் விழும் மழைசாரல்  
மனதிற்கு சுகமோடு அழகானது 

ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த 
வாசனை திரவியத்தின் வாசத்தை விட 
மலர்ந்திருந்து மனம் பரப்பும் ஓர்  தோட்டத்து 
 மல்லிகையின் மனம் மனதிற்கு சுகமானது 

இனிப்பு என எடுத்த சுத்தமான 
தேனின் சுவையை விட 
அளவோடு தேனிட்டு செய்த 
தேன்மிட்டாயின் சுவை இனியது 

பின்னிய கூந்தலில் சூடிய 
முழம் முழமான  பூவை விட 
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும் 
ஒற்றை ரோஜா தனி அழகு

பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில் 
வாழும் வசதி ஆடம்பர  வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து 
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும் 
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு .
...கவியாழினி...  

Monday, 2 December 2013

நீயும் என்னைப்போல


அன்பிலே மூழ்கச்  செய்து 
கண்களால் காதல் வலைவீசி 
வார்த்தையில் அமிழ்தம் ஊட்டி
இருளை  ரசிக்க வைத்து
வானவில்லாய் வாழ்வை  மாற்றி
கட்டிலுக்கு ஆசை மூட்டி 
மலர்ந்த மலரின் மகிழ்வை காட்டி 
மாலை நேரத்தில் மயக்கம் தந்து 
காணும் காட்சிகளை அவனாக்கி   
மேனி தொடும் தென்றலை அவன் 
மூச்சுக்காற்றாய் உணரவைத்து  
தனிமையை நெருப்பாக்கி 
இளமையினை வாட்டி வதைத்து 
வரவிற்காய்  காத்திருக்க வைத்த 
என் காதலனுக்காய் வருகை பார்த்து
 ```தவிக்கும் என்போல் நீயும் ```
உன் காதலன் அருகிலிருக்க 
வளர்பிறையாய் வளர்ந்து 
மகிழ்ச்சியில் மிளிர்கிறாய்  
உன்னை விட்டு விலகிப்போகும் 
நாட்களில் தேய்பிறையாய் 
தேய்ந்து மடிகிறாயோ 
```நிலவே நீயும் என்னைப்போல``` 
...கவியாழினி ...  

Tuesday, 19 November 2013

பத்து நிமிடம்


அவசரமாக பணிக்கு போக வெளியில் வர 
பத்துநிமிடம் காக்கவைத்த தங்கை அவளை 
கடிந்துகொண்டு வாசலில் அமர்ந்தேன் 

சாந்தமுடன் வந்த தென்றல் 
மென்மையாக என்னை வருடிச்செல்ல 
என்னுள்ளும் அமைதி பரப்பியது 

எதிரே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் 
பார்வைக்கு குளிர்ச்சியூட்ட இங்குமங்குமாய் 
சிற்சிறு எறும்புகளின் வரிசை கண்ணில் பட்டது 

எங்கே இவற்றின் பயணமென்று என் 
கண்கள் தேட காட்டிகொடுத்தது இறந்துபோன 
ஓர் இலைபுளுவிர்க்கு அங்கே அமைதியான 
முறையில் இறுதி அஞ்சலி நிகழ்ந்ததை 

சற்று என் பார்வை நகர ஈரப்பத மணலில்
 மொய்க்கும் கால்களோடு மரவட்டைகள் 
அங்குமிங்குமாய் எங்கோ எதையோ தேடின 

சற்று நிமிர்ந்தேன் கண்ணாடி இறக்கைகளோடு 
தும்பிகள் வட்டம் கட்டி எதையோ தேடி பறந்தன 

சுற்றி இருந்த மரங்களில் இங்கொன்றும் 
அங்கொன்றுமாய் குயில்கள் பாட ஒன்றாக 
கலந்து சங்கீதம் செவியை கட்டிப்போட்டது , 

வெளியில் எட்டிப்பார்க்க ஆடுகள் 
ஆட்டுக்குட்டிகளோடு இரவு நினைவுகளை 
அசைபோட்டபடி சூரியன் உதயமும் பெரிதாக 

கொள்ளாமல் அமைதியாய் அன்பு
 பகிர்ந்து கொண்டிருந்தன எதையோ தேடியபடி 

சட்டென வந்து நின்ற தங்கையிடம் 
இத்தருனத்திர்க்கு நன்றி கூறி நானும் 
நடைபோட்டேன் எதையோ தேடி ... 

...கவியாழினி ...

Monday, 14 October 2013

மாலை

தன் நிலா 
காதலியின் 
வரவை
ஒளிந்திருந்து  
ரசிக்க  
தன் 
ஒளிக்கதிர்களை 
சுருக்கி 
மறைந்துக்கொண்டான்
சூரியன்
தோன்றியது 
இதமான 
வேலை அது 
=மாலை= 
...கவியாழினி...

Thursday, 10 October 2013

மண்வாசனை

-வான் மகன்- 
மேகமென்னும் 
தூதுவிட்டு 
மழையென்னும் 
வடிவில் 
கொடுத்திட்டான் 

Saturday, 5 October 2013

மழையோடு ஓர் கற்பனை உறவு

இதமான மழைச்சாரலுடன் 
இலகுவான நடை நடக்க 
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!! 

மோகம் கொண்டு வந்து 
தேகம் தீண்ட நினைத்து கல்லில் 
தெறித்த பின் தெளிந்தாயோ 
அனுமதியில்லாமல் - பெண்மை 
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!! 

உள்ளம் புரிந்து என் இதழ்களில் 
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க 
முத்தமிடுகிறாயே எப்படி 
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல் 
உன்னுள்ளும் இருந்ததோ!!! 

நனைந்தபடி நான் செல்ல தலை 
துவட்டிய தாயின் அன்பில் 
உணர்ந்தேன் உன் தாய்மையை 
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால் 
என்னை தலை குளிக்கவைத்தாய்!!! 

நனைந்த புத்தகத்தை பாதுகாக்க 
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம் 
மிதமானது உன் வேகம் புரிந்தேன் 
தோழமை உணர்வுகொண்டு - என் 
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!! 

...கவியாழினி...



Wednesday, 2 October 2013

மழையே

சோலைக்கு வரும் சோகம் 
உடனே தீர்க்கவரும் மேகம் 
உயிரினங்களுக்கு நீங்கும் தாகம் 
மயில்களுக்கு ஏற்படும் மோகம் 
சில்லென்ற உணர்வடையும் தேகம் 
தூரமாக ஓடிபோகும் சோகம் 
வீட்டுக்குள் மகிழ்ச்சி வரும்வேகம் 
மனிதவாழ்வில் இது ஒரு பாகம் 
கிடைத்திடுமே நீர் உலகின் ஏகம் 
அதனால் செழித்திடுமே முப்போகம் 
இதற்காக எத்துனையோ யாகம் 
ஏதும் நடத்தாமல் வதுவிடுமென யூகம் 
இவற்றை நினைக்கையில் வரும் ராகம் 
இயற்கையால் நமக்கு கிடைத்த யோகம் 
இனிய கொடை மழையே

...கவியாழினி...

அட்சயப்பாத்திரம்

கோடான கோடி 
கவிதைக்கு 
சொந்தமாகியும் 
புதிதாய் 
எழுத 
தொடங்கும் 
கவிஞனுக்கு 
கோடானகோடி 
கவிதைகளை 
வரவைக்கும் 
அட்சயப்பாத்திரம் 
===நிலவு=== 

...கவியாழினி...