Showing posts with label பொதுக் கவிதைகள். Show all posts
Showing posts with label பொதுக் கவிதைகள். Show all posts

Sunday, 8 December 2013

தேவதைகளின் ராணி


ஆர்ப்பறிக்கும் அமைதியில் 
அழகான 
வெண்மை முகிலுக்குள் 
வெண்ணிற ஆடையணிந்து 
மகிழ்ச்சியின் உச்சம் கொண்டு 
வானத்தில் இருந்து பறந்து 
வரவில்லை 
தேவதையாய் இவள் 

காற்றில் அசைந்து 
மரங்கள் மலர்கள் தூவ 
அழகிய அளவான 
குறும்புன்னகையோடு
நளின சேலையணிந்து 
நாகரீக மங்கையாக 
வந்தவளை பார்த்து 
வியந்து நின்ற 
தேவதைகளை பார்த்து 
மிரளாது மிளிராது 
அமைதியாய் வந்து 
நின்றால் இவள் 
தேவதைகளின் ராணியாய்.
...கவியாழினி...

Monday, 28 October 2013

பெண்ணிவளின் சேலை!!!

பால்வண்ண 
பருத்தியில் நூலெடுத்து 
வானமென்னும் 
 தறிகொண்டு 
வானவில்லின் 
வண்ணமெடுத்து 
நிலாவில் சாயம் ஏற்றி 
தேவர்களும் தெளிவாக 
நெய்தெடுத்தது 
பெண்ணிவளின் சேலை!!! 

...கவியாழினி...