Wednesday 13 November 2013

விவாக(ம்) ரத்து

@@@ விவாக(ம்)ரத்து @@@  

நந்த வனத்து தேன்சிட்டுகளாய் 
சிந்தை சொல் கேளாது 
வந்த நேரங்காலம் பாராது 
விந்தைக் காதல் கொண்டோம் 
அந்த ரத்துப்பறவைகளாய்ப் பறந்து 
அந்தி சாயும்நேரம் மறந்தோம் 
காந்த நிலாவானம் வந்தும் 
நீந்தித் திரிந்தோம் காதலுக்குள் 

காமத்தீ பற்றிவிட நாள்குறித்தோம் 
திரு மனத்திற்கு உறவினரோடு 
கோபத்தீ சூழ்ந்தாலும் கன்றுகளென 
பெரு மனங்கொண்டு முடித்தனர் 
சாபத்தீ தீண்டாமல் வாழவேண்டி 
உறு கொண்டாலும் வாழ்த்தினர் 
வேகத்தீ யாய் மனம்பொங்க 
பெருங் கடலாய் இன்புற்றோம் 

தேனிலவு லயித்துப்போனது மீட்டிய 
கட்டிலினிசை தினம் கேட்டு 
வெண்ணிலவு கரையென தோன்றியது 
வாழ்வினிசை தினம் பார்த்து 
சிறுபிளவு தோன்றியது இல்லறத்தின் 
இனியஇசை மீட்ட வழித்தெரியாமல் 
சிறிதளவு நிம்மதியும் சிதறிப்போனது 
பண்ணிசை புரிதல் தவறியதால் 

புரிந்து பேசிக்கொண்ட மௌனங்கள் 
புரியாமல் பேசிக்கொண்டன இன்று 
பரிந்து பகிர்ந்துகொண்ட தருணங்கள் 
அறியாமல் தகர்ந்து போயின 
செறிந்து வளர்ந்திருந்த அன்பு 
புரிதலில்லாமல் சிதறிப் போயின 
கடிந்து கொள்கிறது ஒவ்வோர்நாளும் 
விடியல் வேண்டா மென்று 

விட்டுக்கொடுத்த மனங்கள் சிறுநேரம் 
விட்டுக்கொடுத்து பேச முடியாமல் 
தட்டிக்கொடுத்து இணைந்த சகிப்புத்தன்மை 
தட்டுக்கெட்டு சலித்துப் போனதால் 
கட்டுப்படுத்த முடியாத அகந்தைக்கோபத்தால் 
மெட்டில்லாத பாடலானது வாழ்வாய் 
எட்டிப்பிடிக்க முடியாத வெண்ணிலாவென 
எட்டிஉதைக்குது வாழ்வு மனதிற்கு 

வெறும் காலங்கடத்தி பேசிய 
நாட்களில் பகிர்ந்து கொள்ளவில்லை 
வருங் காலத்தில் வாழ்வின் 
நாட்களை வகுக்கும் வழிகளை 
பெரும் போராட்டமான வாழ்வினில் 
நாட்கள் இனிநகர வேண்டாமென 
இரு மனங்களும் இணைந்தெடுத்திட்டு 
நாளையோடு விவாக(ம்) ரத்து. 

...கவியாழினி...

1 comment: