அத்தை மகனே என் மாமனே
என் பிள்ளையின் தகப்பனே
நீ வேடிக்கை பார்க்கையில்
நான் விதையாக இருந்தேன்
நீ விளையாடும் பருவத்திலே
நான் வேடிக்கைப் பார்த்தேன்
நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே
நான் விளையாடித் திரிந்தேன்
நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச
நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன்
நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க
நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன்
நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய
நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன்
நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட
நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன்
நீ பாடுபட்ட விதை விருட்சமாக வளர்ந்திட
நான் விதைக்கும் உனக்குமாய் வாழ்ந்தேன்
நீ விதையுமற்று விருட்சமுமற்று என்னைகாக்க
நான் விசும்பல்களாய் உன்னுள் உறங்கிப்போனேன்
நீ நான் என்பதெல்லம் நீதானென்று மாற்றம்பெற
என்னையே நான் உண்ணுள்கண்டு மடிசாய்ந்தேன்
கல்லறையிலும் கைபிடித்தபடி கண்ணுறங்குவேன்
நீ என்னுடனிருப்பாய் என் காதல் கணவா ...
...கவியாழினி...
ulamakilntha kavi sako
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி சகோ ...:-)
Deletearumai :)
ReplyDeleteரசித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சரண் :-)
Deleteadraaaaaaaaa sakkka
ReplyDelete:-)
Delete