Wednesday 2 October 2013

மழையே

சோலைக்கு வரும் சோகம் 
உடனே தீர்க்கவரும் மேகம் 
உயிரினங்களுக்கு நீங்கும் தாகம் 
மயில்களுக்கு ஏற்படும் மோகம் 
சில்லென்ற உணர்வடையும் தேகம் 
தூரமாக ஓடிபோகும் சோகம் 
வீட்டுக்குள் மகிழ்ச்சி வரும்வேகம் 
மனிதவாழ்வில் இது ஒரு பாகம் 
கிடைத்திடுமே நீர் உலகின் ஏகம் 
அதனால் செழித்திடுமே முப்போகம் 
இதற்காக எத்துனையோ யாகம் 
ஏதும் நடத்தாமல் வதுவிடுமென யூகம் 
இவற்றை நினைக்கையில் வரும் ராகம் 
இயற்கையால் நமக்கு கிடைத்த யோகம் 
இனிய கொடை மழையே

...கவியாழினி...

No comments:

Post a Comment