Wednesday 23 October 2013

அந்த ஊர்


செக்கச்சிவந்த வானம் , 
கொக்கரக்கோவென கூவும் சேவல் , 
பசுமை எழில் கொஞ்சும் 
கண்களில் படுமிடமெல்லாம் ; 

சிட்டுக்குருவிகளும் ,குயிலும் 
மாறிமாறி கானம்பாடி இன்புறுத்த , 
மனதில் மகிழ்ச்சிபடர மலர்கள் மலரும் 
அதைகண்டு காதல்கொண்டு 
வண்டுகள் ரீங்காரமிடும் , 

வாலை ஆட்டிக்கொண்டு 
ஆசையோடு ஓடிவந்து நிற்க 
பார்ப்போர் நின்ற இடத்தில் 
பசியறிந்து அன்போடு உணவிட 

உண்டுவிட்டு இரவு முழுதும் 
விழித்திருந்து ஊர்காக்கும் நாய்கள் 
அங்கும் இங்கும் ஓடி விளையாட , 

கட்டிளங்ககாளையர்களின் 
வீரவிளையாட்டும், குட்டி குட்டி 
வாண்டுகளும் உடன் கூட்டமாக 
விளையாடும் தெருக்களோடு , 

தன் களைப்பு தெரியாமலிருக்க 
பாடல் பாடிக்கொண்டே 
களைபரித்தும் நாற்று நட்டும் 
செழித்து இருக்கும் 
கிராமம் அல்ல அது , 

))))))((((((!*!*!*!*!*!*!*!*!*!*))))))(((((( 

எங்கு நோக்கினும் 
வாகனங்கள் அலைமோத 
செவிகளில் எப்போதும் 
ஓயாது இரைச்சல் ஒலிக்க , 

இரவும் பகல்போல் மக்கள் கூட்டம் 
அலைமோதிக்கொண்டே இருக்கும் , 
ஆடவரும் பெண்டீரும் பார்ப்பதற்கு 
ஒன்றாகவே காட்சியளிக்கும் 

கால்வைக்கும் இடமெங்கும் 
சலவைக்கல்லும் கருங்கல்லுமாய் 
வழவழப்பாய் காட்சியளிக்கும் 
மண்துகள்கள் பார்ப்பதே அரிதாகும் , 

பத்தும் பனிரெண்டுமாய் உயர்ந்தே 
காட்சியளிக்கும் கட்டிடங்கள் , 
மாடியிலும் பால்கனியிலும் 
இருந்தாலிருக்கும் சிற்சிறு 

பச்சை நிற செடி கொடிகள் 
என காட்சியளிக்கும் 
நகரமுமாய் இல்லாது 

))))))((((((!*!*!*!*!*!*!*!*!*!*))))))(((((( 

சிறிது பச்சை பசேலென்று 
ஒருபுறம்; ரியல் எஸ்டேட்டிற்காக 
பசுமையை கூறுப்போட்டு 
விற்கும் நோக்கில் நடப்பட்ட 
கற்கள் கொண்டு மறுபுறம் 

நிமிடம் தவறாமல் ஓடும் 
போக்குவரத்தாய் இல்லாது 
ஏதோ இல்லையென்று சொல்லாமல் 
இருக்கிறதென தெரியஓடும் வாகனங்கள் 

வளர்ச்சியென்று முக்கிய பகுதிகளில் 
தார் சாலையும் செம்மண்ணோடு 
உள் சாலைக்களுமாய் காட்சித்தர 

சிட்டுக்குருவிகளையும் , 
தும்பிகளையும் தொலைத்தாலும் 
இருக்கிறது பறவைகளென 
சில பறவைகள் பறந்துவரும் , 

தேய்ந்த கிராமமாகவும் , 
வளர்ந்து(மாறி)வரும் நகரமாகவும் 
காட்சியளித்தது அந்த ஊர். 

...கவியாழினி...



2 comments:

  1. kavithaiyum neendathu .. un katpanaiyum neendathu ..en rasippu thanmai kooda neendathuthan ithai padikumpothu

    ReplyDelete