என்கதை பல உன்னிடம் சொல்லிட வார்த்தை தேடுகையில்
அத்துனை வார்த்தைகளும் இல்லாது மறைந்து
உன் அன்பெனும் மனம், புரிந்துகொள்ளும்படி -நான்
மௌனத்தை மட்டும் உதிர்க்கிறேன் எப்போதும்
முகத்தில் போலிஇல்லா புன் சிரிப்போடு ,
மனதில் கள்ளமில்லா உண்மை அன்போடு ,
எண்ணத்தில் களங்கமில்லா நல் நட்போடு - தொடரும்
உன் நட்பில் நடைபோடுகிறேன் நாட்களோடு
மாயகண்ணனின் புல்லாங்குழல் இசை
மனதில் காதல் சொட்டவைக்கும் ராதைக்கு
மனம் நிறைந்த நண்பன் உன் வார்த்தைகள் -தன்னபிக்கை
மரம் வளர்க்கும் நட்போடு இந்த தோழிக்கு
மகிழ்ச்சியோடு மனம் நினைப்பதெல்லாம்
காட்சியாக தருமாம் கதைகளில் சொர்க்கம்
என் மனம் காண்கிறது மகிழ்ச்சி நிறைந்து - என்றும்
உன் நட்பால் நிஜ வாழ்வில் சொர்க்கம்.
...கவியாழினி சரண்யா ...
No comments:
Post a Comment