Sunday 10 November 2013

எரிகிறது மெழுகுவர்த்தி



இருட்டில் பிறந்து இருட்டில் மடியும் 
வாழ்வினிலே வெளிச்சம் கண்டு 
மனிதனாடும் ஆட்டம் இங்கு 
கொஞ்ச நஞ்சம் அல்லவே 

உழைத்தவனின் உணர்வை கொன்று 
திருடிய பணத்திலே தினமும் வாழ்கிறான் 

      லஞ்சம் தனை தஞ்சம் கொண்டு 
நெஞ்சம் மகிழ கொஞ்சுகிறான் 
பெற்றவளை துரத்திவிட்டு பெரும் 
பங்களா கட்டி வாழுகிறான் 

ஊர் பணத்தை எடுத்து ஊருராய் 
உல்லாச பயணம் செய்கிறான் 

கண்ணில் படும் கன்னியர்களை 
கற்பழித்து காமுகனாய் திரிகிறான் 
இல்லாத நிலை தெரிந்தும் 
இல்தனை ஏழைக்கு கொடுக்கிறான் 

தாகத்திற்கு தண்ணீர் தந்த தாய்நாட்டை 
மறந்து அயல்நாட்டில் மோகம் கொள்கிறான் 

கண்ணைப்போன்ற கல்வித்தர கசக்கிப்பிழிந்து 
காசுகேட்டு கண்டபடி ஆடுகிறான் 
மதுவில் மூழ்கி மாது அவளை 
மனம் வலிக்க வதைக்கிறான் 

இறுதி நிலை புரியாமல் இயற்கை 
அனைத்தையும் இல்லாமல் செய்கிறான் 

மனிதனெற்ற உயிர் வாழ மற்ற 
உயிர்களை வதைக்கிறான் 
மனிதம் தொலைத்து இங்கே 
மனித உடலில் திரிகிறான் 

பணம் மட்டுமே வாழ்வென்று 
பழியும் பாவமுமாய் செய்யும் 
செயலிலே பணம் சேர்கிறான் 
பாதியிலே போகையிலே பரிதவிக்கிறான் 

எரிகிற வெளிச்சத்தில் ஆடுமாட்டத்தில் 
வெளிச்சம் மறைந்து இருளும் வருகையில் 

ஆடிப்போவன் என்பதை மட்டும் 
மறக்கிறான் ; இவனின் பலி 
பாவங்களுக்காய் உருகி உருகி 
அணையும் நாள்நோக்கி 
```எரிகிறது மெழுகுவர்த்தி``` 

...கவியாழினி ...

3 comments:

  1. மிக அருமை டா ................

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த மகிழ்ச்சிகள அண்ணா:-)

      Delete