Sunday 6 October 2013

காத்திருக்கிறது

நீயும் நானும் 
ஒன்றாய் அமர்ந்து 
பேசிய சாய்வு 
நாற்காலியும் 

நாம் பாதம் பதித்து 
ஓடிவிளையாடிய 
கிளைபரப்பிய 
மரங்களும் 

நாம் பாதம்பதித்து 
இணைந்து 
வருவோமென 

தரையில் 
இலைகளை பரப்பி 
கையில் 
இரு ரோஜா 
மலர்கள் கொண்டு 

வரவேற்க 
நம்பிக்கையோடு 
காத்திருக்கிறது 
நம் வரவிற்காய்... 

...கவியாழினி...

4 comments:

  1. அருமையான வரிகள்...படிக்க படிக்க ரோஜா மனம் மனதை தூய்மை படுத்துகிறது....பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்து படித்து கருத்து பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சிகள் அப்பா ...

      Delete
  2. வரவேற்க
    நம்பிக்கையோடு
    காத்திருக்கிறது
    நம் வரவிற்காய்...
    மிகவும் அருமை !....

    ReplyDelete