கட்டுக்கடங்கா பாசத்தையும்
கணிக்க இயலா நேசத்தையும்
சொல்லி முடிக்க முடியாமல்
சொல்லாமலே அறியவைக்கும்
எண்ணிலடங்கா எண்ணங்களின்
வெளிப்பாடாய் எத்தனையோ
உறவுகளின் குவியலாய்
தொன்று தொட்டு தொடர்ந்து வந்த
தொய்வில்லா நன்றிமறவா பண்பாடது
ஓர் ஊரனைத்தும் விசாரித்து முடியாமல்
ஓர் ஓரத்திலும் நுணுக்கி எழுதிவிசாரிக்கும்
வரும் நாளை எதிர்ப்பார்த்து
வந்து வந்து எட்டிப்பார்க்கும் சுகம்
வந்துசேர்வதை எண்ணி
வயது பெண் முதல்
வயதான மூதாட்டி வரை
காத்திருந்து கையில் பெரும் சுகம்
முன் தெரு மல்லிகா அக்கா முதல்
முள்ளுக்காட்டு முனுசாமி அண்ணன்
வரை நலம் விசாரித்து
பண்பாய் வீட்டு பசு கன்றையும்
பக்கத்து வீட்டு கந்தசாமி
தாத்தாவின் கைத்தடி வரை
தன் கண்மூடாமல் கணக்கிட்டு விசாரித்து
தன் கையில் வைத்திருக்கும்
பேனாவின் மை தீரும் வரை
தீட்டி முடித்து பின்பும் அதை
விட்டுட்டனே என்று புலம்பி தீட்டும்
ஓரத்தில் நுணுக்கி விசாரிக்கும் அன்பு
காவல் தெய்வமாய் கண்ணுக்கு தெரியும்
காவி உடை அணிந்த தபால்காரர்
என் பையன் எழுதிருக்கான் படித்து சொல்லடி
என் தங்கம் என்று பேத்தியை கொஞ்சும் பாட்டி
கணவனின் விசாரிப்பை படித்து கண்ணீரில்
கண் நேரில் பார்த்த மகிழ்சியில்
காகிதத்தை கட்டியணைக்கும் மனைவி
இது அனைத்திலும் நிரம்பி வழியும்
ஒன்றேஒன்று இந்த கள்ளமில்லா
உள்ளங்களின் கணிக்க முடியா அன்பு
அந்த காலத்தில் எழுதிய
கடிதங்களை பிரதி எடுத்தால்
அவை இக்கால நீண்ட முழு தாளின்
நான்கு பக்கம் நிறையும்
அத்துணையும் அழகான அன்பின் ஏக்கங்கள்
ஆசையாய் எடுத்து படித்தேன் அந்தக்காலத்தில்
ஆறுதலாய் வந்து போன கடிதாசி
என்ற கடிதங்களை ஏக்கத்தோடு ...
...கவியாழினிசரண்யா..
unmai
ReplyDelete