Sunday 14 September 2014

இந்த மனம்


அழகான வாழ்க்கை ஓடிவிடாமலும்
 காத்திருக்காமலும் அனுதினம் நகர்கிறது 

ரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக 
நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் 
வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை 
ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் 

போராட்டங்கள் வாழ்வின் வேர்வரை 
வதைத்தாலும் வளர்வதற்காக அதற்க்கு 
நீரோட்டம் அமைக்க தவறுவதில்லை  இந்த மனம் 

சருகுகளின் பாதியிலே வாழ்கை 
பயணித்தாலும் பசுமை புற்களின் 
பச்சை வாசம் மறக்கவில்லை  இந்த மனம் 

அழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்
 சிரிக்கும் நேரம் வருகையில்  சிரிப்பை 
வீணாக்க நினைப்பதில்லை இந்த மனம் 

வலியோடு வாழ்க்கை வரமறுத்து 
வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் 
அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை 
தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் 

மணி நேரமெல்லாம் மரண வழியாக 
தோன்றினாலும் ஒரு நிமிடம் மலரின் 
முக மலர்சியாய் சிரித்து மகிழும் இந்த மனம்  

தன்னம்பிக்கையோடு தைரியமாய் 
விடாமுயற்சியோடு தன் பாதை  நோக்கி 
பயணத்தை தொடரும் இந்த மனம் 
சில நேரம் என்னையே  பெருமை பட வைக்கிறது.

....கவியாழினிசரண்யா... 

No comments:

Post a Comment