Monday 2 December 2013

நீயும் என்னைப்போல


அன்பிலே மூழ்கச்  செய்து 
கண்களால் காதல் வலைவீசி 
வார்த்தையில் அமிழ்தம் ஊட்டி
இருளை  ரசிக்க வைத்து
வானவில்லாய் வாழ்வை  மாற்றி
கட்டிலுக்கு ஆசை மூட்டி 
மலர்ந்த மலரின் மகிழ்வை காட்டி 
மாலை நேரத்தில் மயக்கம் தந்து 
காணும் காட்சிகளை அவனாக்கி   
மேனி தொடும் தென்றலை அவன் 
மூச்சுக்காற்றாய் உணரவைத்து  
தனிமையை நெருப்பாக்கி 
இளமையினை வாட்டி வதைத்து 
வரவிற்காய்  காத்திருக்க வைத்த 
என் காதலனுக்காய் வருகை பார்த்து
 ```தவிக்கும் என்போல் நீயும் ```
உன் காதலன் அருகிலிருக்க 
வளர்பிறையாய் வளர்ந்து 
மகிழ்ச்சியில் மிளிர்கிறாய்  
உன்னை விட்டு விலகிப்போகும் 
நாட்களில் தேய்பிறையாய் 
தேய்ந்து மடிகிறாயோ 
```நிலவே நீயும் என்னைப்போல``` 
...கவியாழினி ...  

No comments:

Post a Comment