அன்பிலே மூழ்கச் செய்து
கண்களால் காதல் வலைவீசி
வார்த்தையில் அமிழ்தம் ஊட்டி
இருளை ரசிக்க வைத்து
வானவில்லாய் வாழ்வை மாற்றி
கட்டிலுக்கு ஆசை மூட்டி
மலர்ந்த மலரின் மகிழ்வை காட்டி
மாலை நேரத்தில் மயக்கம் தந்து
காணும் காட்சிகளை அவனாக்கி
மேனி தொடும் தென்றலை அவன்
மூச்சுக்காற்றாய் உணரவைத்து
தனிமையை நெருப்பாக்கி
இளமையினை வாட்டி வதைத்து
வரவிற்காய் காத்திருக்க வைத்த
என் காதலனுக்காய் வருகை பார்த்து
```தவிக்கும் என்போல் நீயும் ```
உன் காதலன் அருகிலிருக்க
வளர்பிறையாய் வளர்ந்து
மகிழ்ச்சியில் மிளிர்கிறாய்
உன்னை விட்டு விலகிப்போகும்
நாட்களில் தேய்பிறையாய்
தேய்ந்து மடிகிறாயோ
```நிலவே நீயும் என்னைப்போல```
...கவியாழினி ...
No comments:
Post a Comment