Thursday, 20 March 2014
Wednesday, 12 March 2014
எல்லையற்ற கடலின் ஓர் அலை
பத்துமாதமாய் வயிற்றில்
தங்கி பிறந்தவனெ(ளெ)ன்றா
மொத்தமாக கயிற்றில்
உயிரை விட வந்தாய் ---இல்லை
ஒரு துளி விந்தில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
ஒரு துளி விசத்தில் உயிரை
மரிக்க துணிந்தாய் ---இல்லை
இருவரின் சக்தியும் ஒன்றாகி
பிறந்தவனெ(ளெ)ன்றா
ஒருவனா(ளா)ய் கத்தியில்
உயிரை பிரிக்க வந்தாய்---இல்லை
உன் பெற்றோரின் உடல்
சூட்டில் பிறந்தவனெ(ளெ)ன்றா
நெருப்பின் சூட்டில்
பஸ்பமாக வந்தாய் ---இல்லை
பனிக்குட நீரில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
பலகுட நீரென கடலில்
மூழ்க வந்தாய் ---இல்லை
தலைகீழாய் இவுலகில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
தலைகீழாய் மலையில்
விழ வந்தாய் ---உணர்வாயோ
இரு உடல்களின் காமத்தால்
பிறக்கவில்லை நீ
இரு உள்ளங்களின் சங்கமத்தால்
மண்ணில் பிறந்தாய்
உள்ளுறுப்புக்களின் மாற்றத்தால்
பிறக்கவில்லை நீ
உணர்வுகளின் உச்சத்தில்
உலகில் பிறந்தாய்
வாழ்வின் வலி தாங்காமல்
வந்தாயே உயிர் விட
நினைப்பாயோ ஒருநிமிடம்
உன்னை உயிரோடு ஈன்றெடுக்க
உன் தாய் அனுபவித்த வலியை-அதை
தாண்டியா உன் வாழ்க்கை வலிக்கிறது ?
உற்றவள் உள்ளிருந்து துடிக்க
தன்னிலையறியாது தவித்த
உன் தந்தையின் தவிப்பின்
வலியை விடவா
உன் வாழ்கை வலிக்கிறது ?
சிறு உயிரான உனக்கு வலி
பொருத்து வாழ்வு தந்த
அந்த தாய்தந்தை வலிக்காக
வலி நிறைந்த உன் வாழ்வை
வாழ்ந்து காட்ட மாட்டாயோ
வாழ்வின் எல்லை உன்னைவிட்டு
உன் உயிர் பிரியும் வரை அல்ல
உன் உள்ளத்தை விட்டு
உன் தன்னபிக்கை பிரியும் வரை
பரந்த கடலாய் இவ்வுலகினிலே
ஓயாத அலைகலென
எல்லோர்க்கும் ஓர் வாழ்வுண்டு
அதில் உன் வாழ்வும்
எல்லையற்ற கடலின் ஓர் அலை ...
...கவியாழினிசரண்யா...
Thursday, 6 March 2014
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே
என் முன்னோர்களின்
எத்துனை தலைமுறைகள் தாண்டி
இன்று நானிருக்கிறேன்?
இந்த உலகம் ஐம்பூதங்களில்
குடிகொண்டு வாழ்வதை
ஆன்மீகம் என்கிறார்கள்
இந்த உலகின் ஐம்பூதங்களை
ஆராய்ந்து வாழ்வதை
அறிவியல் என்கிறார்கள்
தியானித்து உலகை மறந்து
சமாதி நிலை அடைவதுதான்
ஆன்மீகத்தின் உச்சமென்றால்
எப்படியும் மனிதன் ஒரு
தருணத்தில் சமாதி நிலைக்குத்
தானாகவே செல்கிறானே
நித்தம் கண்டுபிடிப்புகளும்
அழிவுகளும் ஆராய்ச்சிகளும்தான்
அறிவியலின் உச்சம்மென்றால்
ஒவ்வொரு கணத்திலும்
இவ்வுலகில் ஒன்று
அழிவுக்குள்ளாகியும்
புதிய கண்டுபிடிப்பாகவும்
உருவாகிறதே !
ஒரு துளி விந்தின்
வெளியேற்றந்தான்
ஆழ்ந்த அன்பின்
உச்சமென்றால்
அதுவும் சிலநேரங்களில்
திருப்தியடையாத ஒன்றாக
மாற்றம் பெருவதேன்?
இங்கே ,
இறப்பையும் பிறப்பையும் தாண்டி
சூரிய சந்திர உதயமறைவை தாண்டி
ஆன் பெண் அன்பை தாண்டி
ஆன்மிக அறிவியலை தாண்டி
உலகமென்னும்
நாடக மேடையில்
மனிதர்களென்னும்
கதாபாத்திரத்தில்
நித்தம் ஒரு நாடகம்
அரங்கேறிகொண்டே
இருக்கிறது
தனக்கு எதிரே ஒரு சபை
தம் நடிப்பை கண்கொட்ட
பார்த்து கொண்டிருப்பதை
உணர்ந்து நடிப்பவன்
உச்சம் பெருகிறவனாகவும் ,
தானே நடிகன்
தானே பார்வையாளனென
நடிப்பவனை எச்சமாக
நினைக்கவைத்தும்
இந்த உலகம் என்றும்
சாதா(சதா)ரணமாகவே
இயங்கிக்கொண்டிருக்கிறது.
காலங்கள் முடிந்த பின்பு
ஆடிய ஆட்டங்கள் மறைந்து
அமைதியாக செல்கிறான்
காற்று எங்கே அழைத்துக் செல்லுமோ அங்கே...
...கவியாழினி...
Sunday, 23 February 2014
அகவை நூறு
பதினெட்டு மாதத்தில் வடிக்கப்பட்ட சிலையே
தமிழின் பெருமைக்கு வைக்கமுடியாத விலையே
பதினெட்டாயிரம் டன் சல்லிகளும் எஃகுஇரும்பும்
ஐயாயிரம் டன் சாந்தும் கலந்த கலவையே
வருடங்கள் பல கடந்தும் ஒருமுறையே தன்னை
புதுப்பித்து மெருகேற்றிய குமரிப்பெண்ணே
கடல் கொந்தளிப்பு அதிகம் நிகழும்
பகுதியிலிருந்தும் சமாளித்து பிரச்சனை
காட்டிகொள்ளாத குடும்ப பெண்ணே
காலங்கள் கடந்தும் வருவோர்க்கு கம்பீரமாய்
காட்சி தரும் எழிலோவிய மழலையே
தனுஷ்கோடி புயலிலும் சிறிதும் ஆட்டம்
காட்டாமல் வலிமை மிகுந்திருந்த ஆண்மையே
இரண்டு கிலோ மீட்டரில் கால் நீட்டி உறங்கும்
வயோதிக கொள்ளு பாட்டியே (தாத்தாவே)
வருவோரை மடியில் சுமந்து வழிகாட்டி
உரிய இடம் சேர்க்கும் தாய்மையே
இந்தியநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும்
இணைக்கும் ஒரே இணைப்பு பாலமென
சிறந்து விளங்கும் குருவே
இன்றோடு உனக்கு அகவை நூறு - என்றும்
சிறக்கும் உன்னால் தமிழனின் பேரு
...கவியாழினி...
Saturday, 22 February 2014
Monday, 10 February 2014
இந்தக்குமரியும் அந்தக்குமரியும்
சிறு வயது ஆசை
சில்வண்டாய் எப்போதும்
என்னைச் சுற்றிவரும்
சில்லென்ற தென்றலாய்
சிறகுகள் வருடிட
கண்கள் திறந்தேன்
ஆசை நிஜமானது
கன்னியாகுமரியில் நான்
களிப்போடு நின்றிருந்தேன்
ஐந்தாம் வகுப்பில் 'உலகம் போற்றும்
உன்னத குமரி நானும் சென்றேனே'
தமிழில் படிக்கையிலே
மனதுள் பதியம் போட்டது
இன்று மலர்ந்து மணம் பரப்பியது
கடலின் வாசத்தில் பிறந்து
கடலோடு வளர்ந்தாலும்
கடல் என்றும் களிப்பாகவே;
குமரியிலும் இந்த குமரி
கடலோடு களிப்புகொண்டேன்
வங்காள விரிகுடாவில்
வண்ணமயமாக வளர்ந்தவள்
இன்று அதன் ஒருகரையை
முதன் முதலாய் கண்டேன்
முக்கூடலில் இவளும்
சங்கமித்தால் நான்காக
இவளின் மனதின் மகிழ்ச்சி
அலைகள் ஓயாது
அடித்துகொண்டே இருந்தது
என்னை சிறு வயதில்
சிந்திக்க வைத்தவர்
மனதுள்ளே வீரத்தை
ஊட்டியவர் மண்டபத்தில்
கம்பீரமாய் காட்சி தந்தார்
என் மனதுள் நிறைந்த அமைதி
ஆனந்தத்தை எப்படி சொல்ல
வார்த்தைகள் கிட்டுமோ
என் மனதுள் இன்னமும்
பிரமாண்டமாய் நின்றிருப்பவர்
இங்கும் நின்றுகொண்டிருந்தார்
அப்படியே திருவள்ளுவர்
அவரின்பாத நகக் குழம்புக்குள்
என் கை விரல்கள் எதையோ
மீட்டிக்கொண்டிருந்தன
எனக்கும் தெரியாமல்
இருவரின் ஆசியோடு
விடை பெற மனமின்றி
மீண்டும் வருவேனென்ற
வாக்குறுதி கொடுத்து விடைபெற்றேன் .
இந்த குமரியால் மறக்கவே முடியாத
அந்த குமரி மறப்பேனோ என் வாழ்நாள்
முடிந்தும் இந்நாளை 11.12.13
11 ம் நாள் ,12ம் மாதம் ,13 ம் வருடம்
...கவியாழினிசரண்யா ...
Friday, 3 January 2014
பால்வழியில் பாவையிவள்
பால்வழியில் பாவையிவள்
வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள்
வட்டமிட்டு பறந்துவர
நட்போடு என்னை அழைத்துச்சென்று
இறக்கிவிட்டன
வெண்பஞ்சு வானமென்னும்
மெத்தையிலே நானும் விழ
புகை மண்டல தேவதைகள்
கைப்பிடித்து அழைத்துச்செல்ல
வானவில்லால் கட்டிய நிலவு
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன
நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து
ஒன்றுகூடி ஒளி வீச
சூரியனும் தூர நின்று கடும்
குளிரை மறையச் செய்ய
பூமி வந்து அருகமர்ந்து
பசுமைஎன்னும் விசிறி வீச
கோள்களெல்லாம் என்னை
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட
பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது
இவளுக்கு உணவு பரிமாற்றம்
வானின் விண்கற்கள் இவள் நடைபயில
இடம் விட்டு நகர்ந்து செல்ல
குளிர்காற்று செல்லமாக மெல்ல வந்து
அந்த பல்லாக்கு ஊஞ்சலில் ஆட்டிவிட
மேகம் சூழ்ந்த தென்றலது தாலாட்டுபாடிட
கண்ணுரங்கினேன் நான் கண்ணுரங்கினேன்
விழித்துப்பார்த்தேன், வாழ்ந்துகொண்டிருந்தது
வானுலகமல்ல கனவுலகமென்று உணர்ந்தேன்
பால்வழியில் பாவையிவள் மனம்மகிழ்ந்தேன்
இந்த மண்ணுலகிற்கு விண்ணுலகை ஓர்நாள்
விருந்துக்கு அழைத்துவர ஆசைகொண்டேன்.
...கவியாழினி...
Subscribe to:
Posts (Atom)





.jpg)