Tuesday, 17 December 2013

அழகு


அருவிபோல் அடித்து கொட்டும் 
அடைமழையின் அழகை விட 
துளித்துளியாய் விழும் மழைசாரல்  
மனதிற்கு சுகமோடு அழகானது 

ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த 
வாசனை திரவியத்தின் வாசத்தை விட 
மலர்ந்திருந்து மனம் பரப்பும் ஓர்  தோட்டத்து 
 மல்லிகையின் மனம் மனதிற்கு சுகமானது 

இனிப்பு என எடுத்த சுத்தமான 
தேனின் சுவையை விட 
அளவோடு தேனிட்டு செய்த 
தேன்மிட்டாயின் சுவை இனியது 

பின்னிய கூந்தலில் சூடிய 
முழம் முழமான  பூவை விட 
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும் 
ஒற்றை ரோஜா தனி அழகு

பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில் 
வாழும் வசதி ஆடம்பர  வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து 
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும் 
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு .
...கவியாழினி...  

நடைபயணம்


விமானத்தில் பயணித்த 
முதல் பயணம் 
தொடர்வண்டியில் சென்ற
 சிக்குபுக்கு பயணம் 
சொகுசு வாகனத்தில் சென்ற 
மகிழ்ச்சிப்பயணம் 
பேருந்தில் சென்ற 
தொலைதூர பயணம் 
மோட்டார் வண்டியில் சென்ற 
விரைவுப் பயணம் 
அத்துனை பயணத்தையும் 
தோற்கடித்து  
அழகும் ஆனந்தமும் தந்தது 
எல்லைகள் இல்லாமல் நீளாதோ  
என்று எதையும் எண்ணாமல் 
நண்பனோடு  பேசியபடி சென்ற
 நடைபயணம்
...கவியாழினி ...

Sunday, 15 December 2013

மார்கழி அறிவியலோடு அன்றும் இன்றும்


மார்கழி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு மாதங்கள் பண்ணிரெண்டிலும் மிகவும் கலைகட்டும் மாதம் இந்த மார்கழி. மாதம் முப்பது நாட்களும் குழந்தைகள், கன்னிப்பெண்கள் ,மகளிர், ஆடவர்  என அனைவரும் பக்தி ,கோலம் , கலை ,தூய்மையான நீராடல் என சுறுசுறுப்போடு இருக்கவைக்கும் மார்கழி பற்றிய சில விவரம் நாமும் அறிவோம்மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து நீராடி கோலமிட்டு கடவுளை வணங்குவதன் உண்மை  காரணம் .

அன்றைய நாட்களில் மார்கழி :-

             கோலமிட்டு அதன் நடுவில்  பூசணி பூ வைப்பதன் உண்மை காரணம் நம்மில் பலருக்கும் தெரியாது ஆனால் என் பாட்டி வைத்தார் அதனால் என் தாய் வைத்தார் .என் தாய் சொன்னதால் நானும் வைத்து வருகிறேனென பெண்கள் கோலமிட்டு பூ வைத்து வருகின்றனர் .

             ஆனால் உண்மை அன்றைய நாட்களில் ஓர் வீட்டில் பெண் பிள்ளை இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாது பெண்கள் பெரும்பாலும் வீட்டினுள்ளே இருந்து பழகிய காலம் .அன்றைய காலத்தில் வாசலில் பெண்கள் விடியற்காலையில் எழுந்து சாணம் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மத்தியில் சாணம் பிடித்து வைத்து அதில் பூசணி பூவை வைப்பார்கள் , கன்னிப்பெண்கள் இல்லாத வீட்டில் கோலமிட்டு பூசணி பூ வைக்கமாட்டார்கள் கோலத்தின் நடுவே சாணம் மட்டுமே பிடித்து வைப்பார்கள் .

           பெரியவர்கள்   இளைஞர்கள்  குழந்தைகள் அனைவரும் பஜனை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி வழியாக வருவார்கள் அப்போது ஒவ்வொரு வீட்டிலும் வாசலில் வரைந்துள்ள கோலத்தையும் அதில் வைக்கப்பட்டுள்ள பூசணி பூவையும் பார்த்து இந்த வீட்டில் திருமணத்திற்கு உரிய பெண்ணிருக்கிறாள் என தெரிந்து கொண்டு அந்த வீட்டில் சென்று பெண் கேட்டு அடுத்த மாதமான தையில் திருமணம் ஏற்பாடு செய்வார்கள். வீட்டில் திருமணதிற்கு உரிய பென்னிருகிறாள் என்பதை சுட்டிக்காட்ட இந்த வழக்கம் பின்பற்றினர் நம்முடைய மக்கள் .

            இந்த பூசணி பூக்களை ஒன்றாக சாணத்தோடு எடுத்து வைத்து 29 -பது நாளோடு நிறுத்தாமல் பொங்கலன்றும் வைத்து கன்னி பொங்கல் அன்று அந்த 30 நாளுக்குமுரியவற்றை சேர்த்து எடுத்து சென்று ஆற்றில் கன்னி பெண்கள் சேர்ந்து நடுவில் வைத்து கும்மி பாட்டு பாடி ஆற்றில் கரைத்து விடுவது பண்டைய வழக்கம் .

அறிவியல் காரணம் :

           மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில்ஓசோன்மிக அதிகமாகக் கிடைக்கிறது. இந்த ஓசோன் படலம் தான் சூரியனிடம் இருந்து வருகின்றஅல்ட்ரா வயலட் கதிர்கள்என்று சொல்லப்படுகிற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது.
        
            மார்கழி மாத அதிகாலைகளில் சூரியனின் உதயத்திற்கு முன்பாக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள ரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் நினைவாற்றல் பெருகுகிறது.
        
              ஓசோன் நிறைந்த மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய் தீர்வுக்கும் கூட மிகவும் உதவியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலைக் குளிரில் வெறுமனே மக்களை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் பலர் கேட்க மாட்டார்கள் என்று அதில் பக்தியை சேர்த்து நம் முன்னோர் கட்டாயமாக்கி விட்டார்கள்

           ஓசோன் வாயு அதிகமாகக் கிடைக்கும் அந்த அதிகாலை நேரத்தை வழிபாட்டு நேரமாக்கி விட்டார்கள்அதிகாலையில் விழித்தெழுந்து வாசலில் நீர் தெளித்து சாணமிட்டு மொழுகி கோலமிட்டு, ஆற்றங்கரைக்குச் சென்று நீராடுவது, கோவிலுக்குச் செல்வது, பஜனை செய்வது போன்ற செயல்களில் உடல் ரீதியான நல்ல மாற்றங்களும் நிகழ்கின்றன. அதோடு ஆன்மிக வளர்ச்சியும் ஏற்படுகிறது.

இன்றைய நாட்களில் மார்கழி :-

    பெரும்பாலும்  இன்றைய நவீன காலத்தில் பெண்களும் ஆண்களும் பணியின் சுமையால் பொருளாதாரத்தின் காரணமாக நேரம் தவறாது உழைக்கின்றனர் .இதில் கோவிலுக்கு செல்லவோ ,காலை எழுந்து வீட்டை மொழுகி  பெரிய பெரிய கோலமிடவோ நேரம் செலவிட விரும்புவதில்லை .இவர்கள் இந்த ஒரு மாதத்திலாவது இவற்றை கடை பிடித்தால் உடல்நலத்திற்கு நல்லது என்பதாலும் , கோலம் என்ற கலாசாரம் மறைந்து போகாமல் பெண்கள் ஓரளவேனும் கோலம் தெரிந்துகொள்ளவும் இன்றும் நாம் மார்கழியில் அதிகாலையில் இல்லையென்றாலும் சிறிது முன்னமாக எழுந்து கோலமிட்டு  நீராடி தெய்வத்தை வணங்குவதை பழகச்  சொல்லி வருகிறோம் .


...கவியாழினி ...

Sunday, 8 December 2013

தேவதைகளின் ராணி


ஆர்ப்பறிக்கும் அமைதியில் 
அழகான 
வெண்மை முகிலுக்குள் 
வெண்ணிற ஆடையணிந்து 
மகிழ்ச்சியின் உச்சம் கொண்டு 
வானத்தில் இருந்து பறந்து 
வரவில்லை 
தேவதையாய் இவள் 

காற்றில் அசைந்து 
மரங்கள் மலர்கள் தூவ 
அழகிய அளவான 
குறும்புன்னகையோடு
நளின சேலையணிந்து 
நாகரீக மங்கையாக 
வந்தவளை பார்த்து 
வியந்து நின்ற 
தேவதைகளை பார்த்து 
மிரளாது மிளிராது 
அமைதியாய் வந்து 
நின்றால் இவள் 
தேவதைகளின் ராணியாய்.
...கவியாழினி...

Wednesday, 4 December 2013

என் காதல் கணவா


அத்தை மகனே என் மாமனே 
என் பிள்ளையின் தகப்பனே 

நீ வேடிக்கை பார்க்கையில் 
நான் விதையாக இருந்தேன் 

நீ விளையாடும் பருவத்திலே 
நான் வேடிக்கைப் பார்த்தேன் 

நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே 
நான் விளையாடித் திரிந்தேன் 

நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச 
நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன் 

நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க 
நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன் 

நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய 
நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன் 

நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட 
நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன் 

நீ பாடுபட்ட விதை விருட்சமாக வளர்ந்திட 
நான் விதைக்கும் உனக்குமாய் வாழ்ந்தேன் 

நீ விதையுமற்று விருட்சமுமற்று என்னைகாக்க 
நான் விசும்பல்களாய் உன்னுள் உறங்கிப்போனேன் 

நீ நான் என்பதெல்லம் நீதானென்று மாற்றம்பெற 
என்னையே நான் உண்ணுள்கண்டு மடிசாய்ந்தேன் 

கல்லறையிலும் கைபிடித்தபடி கண்ணுறங்குவேன் 
நீ என்னுடனிருப்பாய் என் காதல் கணவா ... 

...கவியாழினி...

Monday, 2 December 2013

நீயும் என்னைப்போல


அன்பிலே மூழ்கச்  செய்து 
கண்களால் காதல் வலைவீசி 
வார்த்தையில் அமிழ்தம் ஊட்டி
இருளை  ரசிக்க வைத்து
வானவில்லாய் வாழ்வை  மாற்றி
கட்டிலுக்கு ஆசை மூட்டி 
மலர்ந்த மலரின் மகிழ்வை காட்டி 
மாலை நேரத்தில் மயக்கம் தந்து 
காணும் காட்சிகளை அவனாக்கி   
மேனி தொடும் தென்றலை அவன் 
மூச்சுக்காற்றாய் உணரவைத்து  
தனிமையை நெருப்பாக்கி 
இளமையினை வாட்டி வதைத்து 
வரவிற்காய்  காத்திருக்க வைத்த 
என் காதலனுக்காய் வருகை பார்த்து
 ```தவிக்கும் என்போல் நீயும் ```
உன் காதலன் அருகிலிருக்க 
வளர்பிறையாய் வளர்ந்து 
மகிழ்ச்சியில் மிளிர்கிறாய்  
உன்னை விட்டு விலகிப்போகும் 
நாட்களில் தேய்பிறையாய் 
தேய்ந்து மடிகிறாயோ 
```நிலவே நீயும் என்னைப்போல``` 
...கவியாழினி ...  

Sunday, 1 December 2013

நீர் குமிழிகள்


நீர் நிலைகளில் 
வந்து 
மறைவது போல் 
வாழ்விலும் 
இன்பங்களும் 
துன்பங்களும் 
நீர் குமிழிகளாய் 
...கவியாழினி ...