Monday, 18 November 2013

இவனின் நட்பு


நட்பில் கற்பை 
கண்டவர்களுக்கு
 மத்தியில் 
கற்பில் நட்பை 
கொண்டவர்களுக்கு 
மத்தியில் 
நட்பும் கற்பும் 
ஒன்று என 
உணரவைத்தது 
இவனின் நட்பு 
...கவியாழினி...

Sunday, 17 November 2013

நட்பின் பிரிவு


நீயும் நானும் 
நட்போடு 
நடைபயிலையில் 
பூக்களால் 
அட்சதை தூவிய 
மரங்கள்
 நீ பிரிந்து 
நான் மட்டும் 
நடைபோட 
அத்துனையும்
 புயலாய் வீசி 
சருகாய் 
கொட்டுகிறது 
பாவம் 
நம் நட்பின் 
பிரிவை 
அவற்றாலும் 
ஏற்க 
முடியவில்லை 
என்னைப்போல...
...கவியாழினி...

மனம்


மனம் இனிமையானால் 
மௌனத்தின் சப்த்தமும் 
இன்னிசையாக உணரும் !

மனம்  ரணமானால் 
வீணையின் இனிய 
இசையும் முகாரியாகும் !
...கவியாழினி...

Thursday, 14 November 2013

இழந்துவிடாதே



பெற்றோரை இழந்தவனென 
உன்னை நீயே கருணையுரைக்காதே 
பெற்றோரை இழந்தாலும் 
நற்பெயர்பெரும் பெருவாழ்வு வாழலாம் 

உறவினர்களால் உதறி 
தள்ளப்பட்டவனென உணர்விழந்து 
ஓரம் போகாதே 
உறவினரை இழந்தாலும் 
உலகில் உன்னத வாழ்வு வாழலாம் 

கல்வி கற்காதவனெனஉன்னை 
நீயே மக்கிக்கொள்ளாதே 
கல்வி இழந்தும் கற்க்காமலும் 
தம் உண்மை அறிவால் கல்வி 
பயில்பவர்களுக்கு வழிக்காட்டியாய் 
வாழ்ந்த பலர்போல் வாழலாம் 

அடிப்படை உரிமைகளையும் அடைய 
முடியாதவனென அழுகி சாகாதே 
உடையின்றி உணவின்றி 
உரைவிடமின்றியும் உன்னத 
உழைப்போடு ஊரே வியக்க 
உன்னத வாழ்வு வாழலாம் 

நண்பர்களும் யாருமற்று 
நாதியற்றவனாய் வாழ்கிறேனென 
நசுங்கிப்போகாதே நாளை உன் 
முன்னேற்றத்தில் நல்லநண்பர்களும் 
உன் பாதையில் தேடி வந்து 
களிக்கும் வாழ்வு வாழலாம் 

பெற்றோரும் மற்றோரும் 
உற்றோரும் நண்பரும் 
உயிரும் இல்லாமலும் 
இவ்வுலகில் நற்பெயரோடு 
புகழோடு பல வாழ்வு வாழலாம் 
நீ தன்னம்பிக்கை 
இழந்து போனால் இருந்தும் 
இறந்தே வாழ்வாய் 

இழந்துவிடாதே எப்போதும் 
உன் வாழ்கையெனும் 
...தன்னம்பிக்கையை...
...கவியாழினி ...

Wednesday, 13 November 2013

விவாக(ம்) ரத்து

@@@ விவாக(ம்)ரத்து @@@  

நந்த வனத்து தேன்சிட்டுகளாய் 
சிந்தை சொல் கேளாது 
வந்த நேரங்காலம் பாராது 
விந்தைக் காதல் கொண்டோம் 
அந்த ரத்துப்பறவைகளாய்ப் பறந்து 
அந்தி சாயும்நேரம் மறந்தோம் 
காந்த நிலாவானம் வந்தும் 
நீந்தித் திரிந்தோம் காதலுக்குள் 

காமத்தீ பற்றிவிட நாள்குறித்தோம் 
திரு மனத்திற்கு உறவினரோடு 
கோபத்தீ சூழ்ந்தாலும் கன்றுகளென 
பெரு மனங்கொண்டு முடித்தனர் 
சாபத்தீ தீண்டாமல் வாழவேண்டி 
உறு கொண்டாலும் வாழ்த்தினர் 
வேகத்தீ யாய் மனம்பொங்க 
பெருங் கடலாய் இன்புற்றோம் 

தேனிலவு லயித்துப்போனது மீட்டிய 
கட்டிலினிசை தினம் கேட்டு 
வெண்ணிலவு கரையென தோன்றியது 
வாழ்வினிசை தினம் பார்த்து 
சிறுபிளவு தோன்றியது இல்லறத்தின் 
இனியஇசை மீட்ட வழித்தெரியாமல் 
சிறிதளவு நிம்மதியும் சிதறிப்போனது 
பண்ணிசை புரிதல் தவறியதால் 

புரிந்து பேசிக்கொண்ட மௌனங்கள் 
புரியாமல் பேசிக்கொண்டன இன்று 
பரிந்து பகிர்ந்துகொண்ட தருணங்கள் 
அறியாமல் தகர்ந்து போயின 
செறிந்து வளர்ந்திருந்த அன்பு 
புரிதலில்லாமல் சிதறிப் போயின 
கடிந்து கொள்கிறது ஒவ்வோர்நாளும் 
விடியல் வேண்டா மென்று 

விட்டுக்கொடுத்த மனங்கள் சிறுநேரம் 
விட்டுக்கொடுத்து பேச முடியாமல் 
தட்டிக்கொடுத்து இணைந்த சகிப்புத்தன்மை 
தட்டுக்கெட்டு சலித்துப் போனதால் 
கட்டுப்படுத்த முடியாத அகந்தைக்கோபத்தால் 
மெட்டில்லாத பாடலானது வாழ்வாய் 
எட்டிப்பிடிக்க முடியாத வெண்ணிலாவென 
எட்டிஉதைக்குது வாழ்வு மனதிற்கு 

வெறும் காலங்கடத்தி பேசிய 
நாட்களில் பகிர்ந்து கொள்ளவில்லை 
வருங் காலத்தில் வாழ்வின் 
நாட்களை வகுக்கும் வழிகளை 
பெரும் போராட்டமான வாழ்வினில் 
நாட்கள் இனிநகர வேண்டாமென 
இரு மனங்களும் இணைந்தெடுத்திட்டு 
நாளையோடு விவாக(ம்) ரத்து. 

...கவியாழினி...

Tuesday, 12 November 2013

எதையோ தேடுது மனசு


காலை எழுந்து கண் விழித்து 
அவசரமாய் ஆர்ப்பரிக்கும் சூழலில் 
வேலை என்ற பெயரில் ஓடிஓடி 
தயாராகும் நேரமற்ற நேரத்தில் 

ஆளுக்கொரு வழியாய் சொல்லி சொல்லாமலும் 
விடைபெற்று வழியோடு செல்கையில் 
வந்துநிற்கும் நிமிடம் தேனிக்களாய் மொய்க்கும் 
வாகனங்களின் பறக்கும் வேகத்தில் 

இரண்டடி நடையெடுக்க செவியில் விழும் 
ஓராயிரம் அபார சப்த்தத்தில் 
ஓட்டமும் நடையுமாய் முண்டியடித்து செல்லும் 
காலை நேர சாலை பார்க்கையில் 

ஒருரூபாய் முதல் ஓராயிரம் ரூபாய்க்காக 
ஓடிபெருக்கி ஓசை எழுப்பியும் 
ஒய்யாரமாய் அமர்ந்தும் வேலை பார்ப்பவர்களை 
ஒருகணம் உற்றுப் பார்க்கையில் 

வாடியும் மலர்ந்தும் விறுவிறுப்பாய் நுழையும் 
பள்ளி மாணவர்களை பார்க்கையில் 
உணவு வேலையென மனித கூட்டமே 
காத்திருந்து உண்ணும் நேரத்தில் 

வீட்டிற்கு போகும் நேரத்திற்காய் காத்திருந்து 
விடைப்பெற்று சோம்பலாய் செல்கையில் 
சமையலும் படிப்பும் பணி முடிப்புமாய் 
முடித்து ஒன்றுகூடி உன்கையில் 

அவரவர் பணிமுடித்து மன அமைதியோடு 
இரவு படுக்கைக்கு செல்கையில் 
படுத்து கண்கள் மூடிய நிமிடம் 
கண்கள் கண்ணுறக்கம் செல்கையில் 

தினம் தினம் நிமிடமுமாய் நெருடலாய் 
வாழ்க்கையோடு வழக்கம் போல் 
வாழ்ந்து கொண்டு இருந்தாலும் 
எதையோ தேடுது மனசு! 

...கவியாழினி...

Monday, 11 November 2013

கேள்விகேள்! கேள்விகேள்!



சிரிப்பும் கோவமும் அழுகையும் 
ஆத்திரமும் உள்ளிருந்து வெளிவர 
சாந்தமுடன் முகம் கொண்டு 
சாந்தமற்ற மனம் கொண்டு 

ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஆர்ப்பரித்து 
அமைதியாக காட்சியளிக்கும் மனத்துள் 
அடக்கமுடியா கேள்விகள் அடிக்கடி 
மேலெழும்பி வந்து சென்றிடும் 

உலகம் உருவானதெப்படி? -அதை 
பார்க்காமல் அறியாமல் அறிவியலென்பதெப்படி? 
உயிர்கள் பிறப்பு உருவானதெப்படி ? 
இறப்பின் பின் நிகழ்வதை அறிவதெப்படி ? 

மரங்களழித்து மனிதன் வாழ்வதெப்படி ? 
மாசு நிறைந்த உலகம் மாறினால் 
நாளை நோய்கள் குறைவதெப்படி? 
தெரிந்தும் நாம் மாசாக்குவதெப்படி? 

எப்படி? எதற்கு? ஏன்? எதனால்? 
எதற்காக? எவ்வாறு ? எங்கு ? 

கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளை 
காண்போரிடமும் கண்ட இடத்திலும் 
வாரி இறைக்காதே வம்பிழுக்காதே 
வழக்கை வாங்கி கட்டிக்கொள்ளாதே 

தேவை ஏற்படும் இடத்தில் 
தெறிக்கட்டும் உன் கேள்விகள் 
பதில் தேடும் வேளையில் 
உதிக்கட்டும் உன் கேள்விகள் 

கேள்விக்கேள் கேள்விக்கேள் 
சிந்தித்து கேள்விகளை கேட்பவர்கள் 
இவ்வுலகில் அறிவாளி 
கேள்விகளுக்கு சரியான பதிலை 
தேடுபவர்கள் புத்திசாலி 

நீ கேள்விகேட்டு கேள்விகேட்டு 
பதில்தேடு ;தேடி தேடி 
தெரிந்துக்கொள் தெளிவுகொள் 

புத்தியுள்ள அறிவாளியாய் மாறிடு 
அறிவுள்ள புத்திசாலியாய் உருவெடு 

கேள்விகள் தொடரட்டும் 
தொடந்து கொண்டே இருக்கட்டும் 
பதில்கள் கிடைக்கட்டும் 
கிடைத்துக்கொண்டே இருக்கட்டும் 

உன் மனதுள் கேள்விக்குறிகள் 
பலவும் பிறக்கட்டும் பிறந்துகொண்டே 
இருக்கட்டும் பதிலும் கிட்டட்டும். 
கேள்விகேள்! கேள்விகேள்! 

...கவியாழினி...