Thursday 14 November 2013

இழந்துவிடாதே



பெற்றோரை இழந்தவனென 
உன்னை நீயே கருணையுரைக்காதே 
பெற்றோரை இழந்தாலும் 
நற்பெயர்பெரும் பெருவாழ்வு வாழலாம் 

உறவினர்களால் உதறி 
தள்ளப்பட்டவனென உணர்விழந்து 
ஓரம் போகாதே 
உறவினரை இழந்தாலும் 
உலகில் உன்னத வாழ்வு வாழலாம் 

கல்வி கற்காதவனெனஉன்னை 
நீயே மக்கிக்கொள்ளாதே 
கல்வி இழந்தும் கற்க்காமலும் 
தம் உண்மை அறிவால் கல்வி 
பயில்பவர்களுக்கு வழிக்காட்டியாய் 
வாழ்ந்த பலர்போல் வாழலாம் 

அடிப்படை உரிமைகளையும் அடைய 
முடியாதவனென அழுகி சாகாதே 
உடையின்றி உணவின்றி 
உரைவிடமின்றியும் உன்னத 
உழைப்போடு ஊரே வியக்க 
உன்னத வாழ்வு வாழலாம் 

நண்பர்களும் யாருமற்று 
நாதியற்றவனாய் வாழ்கிறேனென 
நசுங்கிப்போகாதே நாளை உன் 
முன்னேற்றத்தில் நல்லநண்பர்களும் 
உன் பாதையில் தேடி வந்து 
களிக்கும் வாழ்வு வாழலாம் 

பெற்றோரும் மற்றோரும் 
உற்றோரும் நண்பரும் 
உயிரும் இல்லாமலும் 
இவ்வுலகில் நற்பெயரோடு 
புகழோடு பல வாழ்வு வாழலாம் 
நீ தன்னம்பிக்கை 
இழந்து போனால் இருந்தும் 
இறந்தே வாழ்வாய் 

இழந்துவிடாதே எப்போதும் 
உன் வாழ்கையெனும் 
...தன்னம்பிக்கையை...
...கவியாழினி ...

No comments:

Post a Comment