Friday, 3 January 2014

பால்வழியில் பாவையிவள்


பால்வழியில் பாவையிவள்  
வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் 
வட்டமிட்டு பறந்துவர 
நட்போடு என்னை அழைத்துச்சென்று
இறக்கிவிட்டன 

வெண்பஞ்சு வானமென்னும் 
மெத்தையிலே நானும் விழ 

புகை மண்டல தேவதைகள் 
கைப்பிடித்து அழைத்துச்செல்ல 

வானவில்லால் கட்டிய நிலவு 
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன 

நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து 
ஒன்றுகூடி ஒளி வீச 

சூரியனும் தூர நின்று கடும் 
குளிரை மறையச் செய்ய 

பூமி வந்து அருகமர்ந்து 
பசுமைஎன்னும் விசிறி வீச 

கோள்களெல்லாம் என்னை 
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட 

பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது 
இவளுக்கு உணவு பரிமாற்றம் 

வானின் விண்கற்கள் இவள் நடைபயில 
இடம் விட்டு நகர்ந்து செல்ல 

குளிர்காற்று செல்லமாக மெல்ல வந்து 
அந்த பல்லாக்கு ஊஞ்சலில் ஆட்டிவிட 

மேகம் சூழ்ந்த தென்றலது தாலாட்டுபாடிட 
கண்ணுரங்கினேன் நான் கண்ணுரங்கினேன் 

விழித்துப்பார்த்தேன், வாழ்ந்துகொண்டிருந்தது 
வானுலகமல்ல கனவுலகமென்று உணர்ந்தேன் 

பால்வழியில் பாவையிவள் மனம்மகிழ்ந்தேன் 
இந்த மண்ணுலகிற்கு விண்ணுலகை ஓர்நாள் 
விருந்துக்கு அழைத்துவர ஆசைகொண்டேன். 

...கவியாழினி...

Thursday, 2 January 2014

மறுசுழற்சி



நம் மனம் 
ஓர் தண்ணீர் 

சுமைகள் 
பாரங்களாக 
மாறிட 
பனிகட்டியாகிறது 

சுமைகளெல்லாம் 
மறைந்து 
கண்ணீராக 
வெளியேற 

ஆவியாகி 
மறைந்து 
போகிறது 

மறுசுழற்சியானது 
நீர் மட்டுமல்ல 
நம் மனதின் 
எண்ணங்களும் 

...கவியாழினிசரண்யா...

Wednesday, 1 January 2014

இந்த வாழ்வில் இந்த நாள்



நறுமுகை மலர்களின் நந்தவனத்தில் 
நான் கண்டெடுத்த ஒருவகை மலராய் 
இந்த வாழ்வில் இந்த நாள் 
...கவியாழினி...

Friday, 20 December 2013

இனிய தோழி


என் இதயமென்னும் 
நாட்குறிப்பேட்டினை
திறந்துப் பார்த்தேன் 
அத்துனை பக்கங்களும்
நிரம்பி வழிந்திருக்கிறது 
இனிய தோழி
உன் அன்பில் 
என் உணர்வுகள்.

   ...கவியாழினி...

Thursday, 19 December 2013

இயற்கையின் காதல் மறுசுழற்சி


மேகமகளிடம் காதல் கொண்ட 
காற்று வாலிபன் 
காதல் ஆசையில் தீண்டிட 
கருவாக உருவாகும் 
மழைத்துளி மகள் அவள் 

வாழ ஆசைகொண்டு பூமிநோக்கிட 
வரும் வழியில் 
காலங்கள் மாறிவர பூப்பெய்தும் 
அவளை தீண்டிடாமல் 
மக்கள் குடைகளுக்குள் தஞ்சமுற 
மீறியும் தீண்டிவிட்டால் 
நடக்கிறது தலை குளியல் 

அவளின் வருகையில் மகிழ்ந்து
ஆற்றங்கரைகளிலும் ஓடைகளிலும் 
நடக்கிறது மகிழ்ச்சி திருவிழாக்கள் 
பருவக்காதல் அவளையும் 
எட்டிவிட நிகழ்கிறது சூரியனோடு 
காதல் திருமணம் 

மணந்த அவனோடு சங்கமித்து 
மகிழ்ச்சி வாழ்வில் 
ஆவியாகி அவனை சென்றடைய 
காதல் கணவன் 
அன்பில் மறந்து போகிறாள் 
வாழ்ந்த பூமி 
காய்ந்து கொண்டிருப்பதை 

பூமி ஈன்ற மகள்களாம் 
மரங்கள் தாயைகாக்க 
மேக மகளுக்கு முறையாக 
ஈன்றெடுக்கின்றன காற்றென்னும் 
மகனை மீண்டும் நடக்கிறது 
இயற்கையின் காதல் மறுசுழற்ச்சி 

...கவியாழினி...

Wednesday, 18 December 2013

ரணத்தின் தழும்புகள்


கணவனிழந்த   தனிமை பெண்ணிவள் 
தன்மானத்தோடு தனியே வாழ்ந்தால் 
விடவில்லை  காமமுடன் 
கயவர்கூட்டம் மாற்றியது அவளை 
=======விலை மாதுவாய்======

தாய்தந்தையற்று தனித்து கிடந்தான் 
சிறுவனிவன் அலைந்து திரிந்தான் 
பசியின்கொடுமை நீட்டியகையில் ஒன்றும் 
போடவில்லை திருடிஓடி தின்றவனிடம்  
வயிறும் சொல்லவில்லை திருடியதை 
உன்ன மாட்டேனென்று மாறிவிட்டான் 
======திருடனாக====== 

தொலைக்காட்சியும் இணையத்தின் 
வேண்டாத தளங்களும் காட்டியது 
அந்தரங்கத்தை கண்டபடி 
தனித்துக்கொண்டான் காமத்தை 
அடுத்தவீட்டு சிறுமியிடமும் வெளியில் 
சொல்ல தயங்கும் ஊமை 
கண்ணியிடமும் மாறிப்போனான் 
======காமுகனாய்======

வேலைத்தேடி அலைந்தான் உழைக்கிறேன் 
கொடுஎன்றான் கொடுக்கவில்லையாரும் 
பசியின் கொடுமை மாற்றியது வழிபறியில் 
வேலையில்லை என்றவனே வந்துவிட  
இருப்பதை எல்லாம் கொடுத்து உயிர்த்தப்பி 
ஓடினான் இன்று மாறிவிட்டான் பிரபல
 ======அடிதடியாலனாய்======

மன்னிக்க வேண்டிய தவறுகளை 
மலையாக வார்த்தைகளால் வதைத்து 
கொட்டியது சமூகம்; திருத்த வேண்டிய 
சட்டமும் கேளிசெய்யவே வெறுத்துப்போனான்
 வீழ்த்தி தள்ளினான் உயிர் அருமை 
தெரியாமல் இன்று உலா வருகிறான் 
======தீவிரவாதியாய்====== 

பிறப்பதில்லை இங்கு யாரும் 
சமூகதுரோகிகளாய் மாற்றுகிறோம் 
துரோகிகளாய்  நாம்  அன்பும் 
அரவணைப்பும் அடிப்படை 
உரிமையும் இல்லாமல் 
போகவே மாற்றபடுகிறார்கள் 
சமூக துரோகிகளாய் 
படும் ரணங்கள் காயமால் மாற்றமிட 
தழும்புகளாய் மாறுகின்றன 
======ரணத்தின் தழும்புகள்====== 

 ...கவியாழினி...

(இங்கு இப்படைப்பை பதிவதில் எனக்கும் வருத்தமே  இங்கு சுட்டி காட்டும் சூழ்நிலைகளால் மட்டுமே அவர்கள் அப்படி மாற்றம் பெற்றார்கள் என்பது என் கருத்து இல்லை இப்படியெல்லாம் மாற்றமடையும் இவர்களுக்கு நம்மால் முடிந்த அன்பை காட்ட அவர்கள் சமூக விரோதிகளாக  மாற்றம் பெறாமல் தடுக்க முடியும் என்பதே என் கருத்து அதை உணரவே இங்கு இந்த படைப்பு உதாரணம் : பசியில் துடிப்பவனுக்கு ஒரு வேலை உணவு கொடுத்தால் அவன் திருடனாவது இன்றைய பொழுதில் நீ இட்ட ஒரு வேலை சோற்றில்  தடுத்து நிறுத்தப்படும் .)

Tuesday, 17 December 2013

அழகு


அருவிபோல் அடித்து கொட்டும் 
அடைமழையின் அழகை விட 
துளித்துளியாய் விழும் மழைசாரல்  
மனதிற்கு சுகமோடு அழகானது 

ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த 
வாசனை திரவியத்தின் வாசத்தை விட 
மலர்ந்திருந்து மனம் பரப்பும் ஓர்  தோட்டத்து 
 மல்லிகையின் மனம் மனதிற்கு சுகமானது 

இனிப்பு என எடுத்த சுத்தமான 
தேனின் சுவையை விட 
அளவோடு தேனிட்டு செய்த 
தேன்மிட்டாயின் சுவை இனியது 

பின்னிய கூந்தலில் சூடிய 
முழம் முழமான  பூவை விட 
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும் 
ஒற்றை ரோஜா தனி அழகு

பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில் 
வாழும் வசதி ஆடம்பர  வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து 
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும் 
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு .
...கவியாழினி...