Sunday 20 October 2013

கண் அன்பு நீ

வேறுபட்ட வகையான  பணி
வெவ்வேறு கலாச்சார குடும்பம்
வேற்றுமையான பழக்கவழக்கங்கள்
ஒன்றாக சங்கமித்தது இருமனங்கள்

பேசிய பல  மொழிகளில்
ஒற்றுமையானது இருவருக்கும்
தமிழும் ஆங்கிலமும் 

அதிகம் வார்த்தைகள் பரிமாறவில்லை
பார்வைகள் பலவற்றை பரிமாறின

ஆசையின் அர்த்தங்களை அவர்களின்
முகத்தின் மாற்றங்கள் காட்டிக்கொடுத்தன

அவள் வரவு காணாமல் அனிச்சம்மலராய்
அவன் முகம் வாடும்
அவனின் அன்புப்பார்வையில்  அவள்
நாணிக் கண்புதைப்பாள்

இவளின் மனம் புரிந்து அவன் செயல்படுவான்
அவன் குணம் அறிந்து இவள் செய்திடுவாள்

அவள் கைப்பட்டதால் பிடிக்காததும்
பிடித்தது இவனுக்கு
இவனுக்கு பிடிக்காததால் பிடித்ததும்
வெறுத்தது அவளுக்கு

கோவங்கள் வருகையில் யாரேனும்
விட்டுக்கொடுத்தால் நல்லதென நினைக்க
இருவரும் விட்டுக்கொடுப்பார்கள்
விட்டுக்கொடுக்க முடியா அன்பிற்காக

முதன்முதலாய் மனம்திறக்க
தன் காதலை வெளிப்படுத்த
நேருக்கு நேர் நின்று மனதின்
வெளிப்பாடை தங்களின் இதழ்
திறந்து சொல்லிக்கொண்டனர்
===கண் அன்பு நீ ===

---கண்------ eye ----------- I
--அன்பு ----காதல் ----LOVE
-----நீ--------YOU--------------U

...கவியாழினி...



3 comments:

  1. rompa kavarnthu iluthu kavithai :) nijamaka amaiyum amaiyattum :) கண்- அன்பு நீ ... :)

    ReplyDelete
    Replies
    1. கவி ரசித்து படித்து மகிழ்ந்ததில் மகிழ்ச்சி என்றும் தொடருவோம்அன்பென்னும் நட்போடு ... ...:-)

      Delete