Saturday 5 October 2013

வாழ்வோம் வாழ்வை !

ஒரே நாளில் பூத்துமடியும் பூக்கள் கூட 

மலரும் போதும் சிரிக்கின்றன ! 
மண்ணில் விழும்போதும் சிரிக்கின்றன ! 
செடியில் இருக்கும் போதும் சிரிக்கின்றன ! 
அனைவர் மனதிலும் நீங்காமல் வாழ்கின்றன ! 

ஆனால் 
மனிதர்கள் பிறக்கும் போதும் அழுகின்றோம் ! 
இறக்கும்போதும் மற்றவரை அழ வைக்கிறோம் 
இருக்கும் வரை அனைவரையும் மகிழ்விக்கலாமே! 

இறக்கத்தானே பிறந்தோம் ! 
இரக்கத்தோடு வாழ்வோம் !

...கவியாழினி...

No comments:

Post a Comment