Saturday 5 October 2013

தன்னம்பிக்கைத் துளிகள்

கண்ணீர் குளத்தில் 
மலர்ந்த வெண் தாமரை !!! 

கவலைகள் நிரம்பிய 
குளத்துள் மூழ்கிய போது 
உதவியாய் வந்த நீச்சல் !!! 

சுற்றி இருப்போர் 
உதாசிக்க ஊனமான 
எனக்கு ஊக்கம் தந்த உணர்வு!!! 

கண்தெரியாதவனாய் நான் 
நடைபயில எனக்காக 
துணைக்கு வந்த கைத்தடி !!! 

பெற்றோரும் மற்றோரும் 
அலட்சியம் செய்கையில் 
என் லட்சியம் காட்டிய கண்ணாடி!!! 

கரப்பான் தின்று 
கிடைத்த புத்தகத்தில் 
கண்டெடுத்தக் கரு!!! 

நிர்வாணமாய் நான் 
நின்றிருக்கையில் மானம் 
காக்க வந்த ஆடை!!! 

====தன்னம்பிக்கை ==== 

...கவியாழினி...

No comments:

Post a Comment